எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த ‘நெகட்டிவ்’ சிக்னல்!
சென்னை : அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது, ஒட்டுமொத்த சூழலையும் தலைகீழாகத் திருப்பிப் போட்டுள்ளது. இந்தத் தீர்ப்பே, ஓபிஎஸ் கை ஓங்குவதற்கு வலுவாகக் கிடைத்துள்ள பிடியாகப் பார்க்கப்படுகிறது.
Recommended Video
அதிமுக தலைமைக் கழக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் செய்த மேல் முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
இன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள தலைமைக் கழக சாவி வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பினர், உச்ச நீதிமன்றத்திலும் தங்களுக்கு சாதகமான முடிவே வரும் என உற்சாகத்தோடு கூறி வருகின்றனர். அதே நேரம், ஈபிஎஸ் தரப்பு கவலையில் ஆழ்ந்துள்ளது.

தலைமைக் கழகத்தில் மோதல்
அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தைத் தொடர்ந்து கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது, ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தார்.

அலுவலக சாவி
இது தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக தொடர்ந்த வழக்கில் அதிமுக தலைமை கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அதிமுக தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் போதிய பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஓபிஎஸ் மேல்முறையீடு
இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும் வட்டாட்சியர் தலைமைக் கழகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்ததற்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை விசாரணை?
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் கொடுத்ததற்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, நாளைய தினம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்குழு வழக்கு
இதற்கிடையே இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதியின் நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் முறையே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களாகவே செயல்படுவார்கள்.

ஈபிஎஸ்ஸை பாதிக்குமா?
இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு அதிமுக தலைமைக் கழக சாவி வழக்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெரும்பான்மை இருப்பதாகவும், இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் முன்வைத்த வாதங்களின் அடிப்படையிலேயே அலுவலக சாவி ஈபிஎஸ் வசம் ஒப்படைக்கும் தீர்ப்பை வழங்கியிருந்தது சென்னை உயர் நீதிமன்றம்.

என்ன நடக்கும்?
ஆனால், இப்போது பொதுக்குழுவே செல்லாது என்றும், ஜூன் 23க்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றம் நிச்சயமாக இந்தத் தீர்ப்பையும் கருத்தில் கொள்ளும் என்பதால், அடுத்து ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டும் வரை, அலுவலக சாவி தொடர்பான ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ஓபிஎஸ்ஸுக்கு சாதகம்?
அதிமுக தலைமைக் கழக சாவி வழக்கு, அதிமுகவின் உரிமை சார்ந்த பிரச்சனை. இன்றைய தீர்ப்பின் மூலம் அதிமுகவில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாகத் திரும்பும் என்றும், அலுவலகத்திற்குச் செல்வதிலும் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகவும், ஈபிஎஸ்ஸுக்கு பெரிய பின்னடைவாகவும் அமையும்.

ஒருமுறை கூட போகலயே
அதிமுக தலைமை அலுவலக சாவியைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி இன்னும் ஒரு முறை கூட அலுவலகத்திற்குச் செல்லவில்லை. ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின் காரணமாக, தானும் அங்கு செல்லாமல் இருந்து வந்தார் ஈபிஎஸ். இந்நிலையில், இந்த வழக்கும் ஓபிஎஸ் பக்கம் திரும்பியிருப்பது ஈபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications