Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலித்துக்கு பரிந்துரைப்பாரா ஆர்என் ரவி?பாலச்சந்திரன் ஐஏஎஸ் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதல்வராக வேண்டும் என்று பேசியிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் பதவியில் மட்டுமல்ல ஆளுநர் பதவியிலும் கூட ஒரு தலித் இருக்க வேண்டும் என்பதற்காக தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலித் ஒருவரை நியமிக்க வேண்டும் என மத்திய அரசிடம் பரிந்துரைப்பாரா? என சமூக செயற்பாட்டாளரான பாலச்சந்திரன் ஐஏஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

மாலைமுரசு டிவி சேனல் விவாதத்தில் பாலச்சந்திரன் ஐஏஎஸ் கூறியதாவது: ஆளுநர் கூறியதை நான் வரவேற்கிறேன். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் (தலித்) தமிழக முதல்வராக வரவேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதை வரவேற்கிறேன். அப்படி வந்தால் படிப்படியாக இடஒதுக்கீடு மூலம் சமுதாய மறுமலர்ச்சி பாதையில் இன்னும் முன்னேற்றம் இருக்கிறது என்பதாக இருக்கும்.

tamilnadu rn ravi dalits

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலித்துக்கு பரிந்துரைக்கலாம்

முதல்வர் பதவி என்பது மட்டுமல்ல தமிழ்நாட்டு ஆளுநராகக் கூட பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் (தலித்) வரவேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன். நம்முடைய ஆளுநர் ஆர்.என்.ரவியே இதற்கு முன்மாதிரியாக இருந்து, மத்திய அரசிடம், தாம் பதவியை ராஜினாமா செய்கிறேன்; தமக்கு பதிலாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை (தலித்) தமிழ்நாட்டு ஆளுநராக நியமியுங்கள் என
சொல்லலாம். அப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்னார் எனில், சொல்வதை செய்யக் கூடியவர்தான் ஆளுநர் என்ற நம்பிக்கையும் வரும்.

சமூக நீதி என்பது என்ன?

சமூக நீதி என்பது அடிப்படையில் பிறப்பால் எல்லோரும் ஒன்று; எந்தவிதமான ஏற்றத் தாழ்வும் கிடையாது என்பதுதான். சனாதன தர்மத்தை ஆதரிக்கிறோம் என பாஜக மீண்டும் மீண்டும் சொல்ல்விட்டது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா
கும்பமேளாவில் கூட சனாதனத்தை ஆதரிப்பவர்களையே இனி வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று கூட தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றனர்; சனாதன தர்மத்தை ஆதரிப்பவர்கள்தான் வாக்காளர்களாக இருகக் வேண்டும் என்றெல்லாம் கூட சொல்லி இருக்கின்றனர்.

பகவான் கிருஷ்ணர் சொன்னது என்ன?

வருணாஸ்ரம தர்மம், சனாதன தர்மம் என்பது பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர்; தாழ்ந்தவர் என்கிறது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொன்னதாக, யார் யார் எந்த தொழில் செய்ய வல்லமை படைத்தவர்களோ என்பதை அவர்கள் பிறப்புக்கு முன்னரே
அறிந்து அத்தகைய தொழிலைச் செய்பவர்களாக நான் படைத்தேன் என தெரிவித்துள்ளார். இது சனாதன தர்மத்தை, வருணாஸ்ரம தர்மத்தை ஆதரிக்கிற கூற்று. கிருஷ்ணர், குணதர்மம் தொடர்பாக 2-வது வரியில் சொல்லி இருக்கிறார்.. அதை மட்டும் கிருஷ்ணர் சொல்லி இருந்தால் ஏற்கலாம். அப்படியானால் முதல் வரியை சொல்லி இருக்கக் கூடாது. இவ்வாறு பாலச்சந்திரன் ஐஏஎஸ் தெரிவித்தார்.

ஆளுநர் ரவி பேசியது என்ன?

அண்மையில் சிதம்பரத்தில் நடைபெற்ற 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி ஏ.எஸ். சகஜானந்தர் அடிகளார் 135 -ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, தலித் ஒருவர் முதல்வராக வேண்டும்; தலித்துகளை தீய சக்திகள் பிரித்து வைத்துள்ளதாக கூறியிருந்தார். இதுதான் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான டிவி விவாதத்தில் பாலச்சந்திரன் ஐஏஎஸ், ஆளுநர் ரவிக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+