Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட ஆணையத்தில் வலியுறுத்தப்படும்: துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படும் என காவிரி ஒழுங்காற்று குழு கூறியது போதாது என்று கூறிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரியில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட ஆணையத்திடம் வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரி நீர் ஒழுங்காற்று குழு என்று ஒன்று உள்ளது. அந்த குழுவில் நாள் ஒன்றுக்கு 24 ஆயிரம் கன அடி நீர் என 10 நாளைக்கு திறந்து விடும் படி ஒரு கோரிக்கையை வைத்தோம். ஆனால் அந்த குழுவினர் என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றால், 5 ஆயிரம் கன அடி நீர் தான் 15 நாளைக்கு திறந்துவிடும்படி பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அது போதாது என்பது நமது கோரிக்கை.. இன்று மதியம் இரண்டரை மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடக்கிறது.

will urged to release 24,000 cubic feet of water per second in Cauvery: Minister Duraimurugan

நம்முடைய செயலாளர் மற்றும் சிடிசி சேர்மேன் சுப்பிரமணியன் அவர்களும் கலந்துகொள்கிறார்கள். அவர்களிடத்திலே நாம் இந்த கோரிக்கைகளை வற்புறுத்தக்கோரி சொல்லியிருக்கிறேன்.. 24 ஆயிரம் கன அடி நீர் திறந்தால் தான் பயிர்கள் கருகாமல் இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லும்படி கூறியிருக்கிறேன். இந்த கோரிக்கையினை அந்த கூட்டத்தில் அவர்கள் வைப்பார்கள்.. அதன்பிறகு என்ன என்பதை அவர்கள் சொல்வார்கள்.. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+