“ஊழல்..” வாயை விட்ட விஜய்! ப்ளூ சட்டை மாறன் கேட்ட நறுக் கேள்வி! தவெக பதில் சொல்லுமா?
சென்னை: மாமல்லபுரம் கூட்டத்தில் பேசிய விஜய், தீய சக்தியாக இருக்கட்டும்.. ஊழல் சத்தியாகட்டும்.. இரண்டுமே தமிழ்நாட்டை ஆளக்கூடாது. என்று திமுக மற்றும் அதிமுகவை விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஊழலை பற்றி பேசும் விஜய், ப்ளாக்கில் டிக்கெட் விற்பனை குறித்து இத்தனை நாட்கள் வாய் திறக்காதது ஏன்? என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார்.
வழக்கமாக திமுகவை கடுமையாகவும், பாஜகவை தொட்டும் தொடாமலும் விமர்சித்து செல்லும், விஜய்.. இந்த முறை தனது டோனை கொஞ்சம் மாற்றி, அதிமுகவையும் உள்ளே இழுத்திருக்கிறார்.

விஜய் பேசியது என்ன?
"தீய சக்தியாக இருக்கட்டும்.. ஊழல் சத்தியாகட்டும்.. இரண்டுமே தமிழ்நாட்டை ஆளக்கூடாது. அப்படிப்பட்ட கட்சிகளை உண்மையாகவே எதிர்க்கிற தைரியம், நம்மிடம் மட்டும் தான் இருக்கிறது. அதனால் எந்த சூழ்ச்சி செய்தாலும், எந்த அழுத்தம் கொடுத்தாலும்.. பணிந்து போக, அடிமையாய் இருக்க நான் அரசியலுக்கு வரவில்லை. என் மண்ணுக்கும், மக்களுக்கும் யார் தீமை செய்தாலும்.. அதை எதிர்த்து அவர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க தான் நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
அதிமுகவை தாக்கி விஜய்
அண்ணா தொடக்கி வைத்த கட்சியும், அண்ணாவையும் மறந்து சுயநலமாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. அண்ணா பெயரில் இருக்கும் கட்சியும் அவரை மறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நாம் அவரை மறந்து விடக்கூடாது" என்று பேசியிருந்தார் விஜய்.
ஊழல் கிடையாதா?
அதிமுக மீதான விமர்சனத்திற்கு, அக்கட்சி காட்டமாகவே பதிலடி கொடுத்திருந்தது. விஜய்யை பனையூர் பண்ணையார் என்றும், ஊழல் குறித்து பேசும் விஜய் தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் கோடிகளை அள்ளியது மட்டும் ஊழல் கிடையாதா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.
மண்டியிடுவதும் ஊழல்தான்
தனது படம் வெளியாக அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கை கட்டி நின்றதாக விமர்சித்திருக்கும் அதிமுக, ஊழல் என்பது வெறுமனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும்தான் என்று காட்டமாகவே விஜய்யை வைத்து செய்திருந்தது.
தைரியம் இருக்கா விஜய்?
இப்படி இருக்கையில் திரைப்படம் விமர்சகரும், யூடியூபருமான ப்ளூ சட்டை மாறனும் விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார். தனது x பக்கத்தில், "ஊழலை நேரடியாக செய்யாவிட்டாலும்.. அதை வேடிக்கை பார்த்து அமைதியாக இருப்பதும் ஊழல்தான். இத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது 'எனது ரசிகர்கள் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கவோ, விற்கவோ கூடாது' என சொன்னதுண்டா? ஜனநாயகன் வரும்போது இதை சொல்ல தைரியம் உண்டா?" என்று நறுக்கென கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு தவகெவினர் என்ன பதிலை சொல்லப்போகிறார்கள் என்பது எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
-
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
தவெக வேட்பாளரின் மச்சான் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.50 லட்சம் பறிமுதல்.. வாக்காளர்களுக்காக பதுக்கலா? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான்












Click it and Unblock the Notifications