சென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை 2 மணிக்கு கனமழைக்கு வாய்ப்பு?.. சொல்கிறது விண்டி செயலி
சென்னை: சென்னையில் அதிகாலை 2 மணிக்கு நல்ல மழை பெய்யும் என தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது. என்னதான் தனியார் வானிலை நிறுவனங்கள் கூறினாலும் சென்னை வானிலை மையம் இதுகுறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கவுள்ளது. அந்த பருவமழை தொடங்குவதற்கு எப்போது சாதகமான சூழல் நிலவுகிறது என்பது தெரியவில்லை. ஆனால் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என கூறுகிறார்கள்.
இன்று மாலை 4 மணிக்கெல்லாம் சென்னையில் கும்மிருட்டு சூழந்தது. அப்போது பலத்த இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலான நல்ல மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 செமீ மழை பெய்தது.

அண்ணாநகர்
முகப்பேர், அண்ணாநகர், நுங்கம்பாக்கத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஒரு மணி நேரத்தில் இத்தகைய மழையை மக்கள் எதிர்பார்க்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்றாலும் அலுவலகங்களை விட்டு வெளியேறுவோர் கடும் அவதிப்பட்டனர்.

விண்டி டிவி
எழும்பூர் அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக விண்டி டிவி எனும் தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விண்டி டிவியில் செயற்கைகோள் படம் விளக்கியுள்ளது.

கேளம்பாக்கம்
அதில் மறைமலை நகர், கேளம்பாக்கம், தண்டலம், செங்கல்பட்டு, மகாபலிபுரம், கல்பாக்கம், மதுராந்தகம், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும். அதிகாலை 2 மணிக்கு தொடங்கும் இந்த மழை காலை 5 அல்லது 6 மணிக்கு முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்ல மழை
அதிலும் 30 மி.மீ. மழை பெய்யும் என்பதால் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது. அரக்கோணம், வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கண்ட பகுதிகளில் காலை 8 மணிக்கு இயல்பு நிலை திரும்பும் என தெரிகிறது. என்னதான் தனியார் வானிலை நிறுவனங்கள் கூறினாலும் சென்னை வானிலை மையம் இதுகுறித்து எந்த தகவலையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications