ஐஐடி-யில் பிடிபட்ட உலகின் நீளமான இன மலைப்பாம்பு.. சென்னைக்கு வந்தது எப்படி? அதிகாரிகள் திகைப்பு
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு பிடிப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நிகோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் இந்த மலைப்பாம்புகள் சென்னை ஐஐடிக்குள் வந்தது எப்படி என்பது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. 7 முதல் 8 அடிகள் கொண்ட இந்த மலைப்பாம்பு குட்டி கிண்டி தேசிய பூங்கா அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. வரிக்கோடுகள் கொண்ட இந்த மலைப்பாம்பு உலகின் மிக நீளமான இனத்தை சேர்ந்தது ஆகும். அதோடு, அதிக எடை கொண்ட பாம்பு இனங்களில் மூன்றாவது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் நிகோபார் தீவுகளில் மட்டுமே இந்த மலைப்பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இனப்பெருக்கத்திற்கான வாய்ப்பு எதுவும் இன்றி இந்த பாம்பு சென்னை ஐஐடிக்குள் வந்தது எப்படி என்பது புதிரை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த வியாழக்கிழமை இரவு ஐஐடி வளாகத்திற்குள் பாம்பு இருப்பதாக எங்களுக்கு அழைப்பு வந்தது.
விஷத்தன்மை அற்றது?: இதையடுத்து உடனடியாக வேளச்சேரி மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பிடிக்கும் இருளர் என மூன்று இடங்களில் இருந்து தலா ஒரு குழு சென்றது. உடனடியாக பாம்பை பிடித்து கிண்டியில் உள்ள பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊர்ந்து செல்லும் இந்த மலைப்பாம்புகள் விஷத்தன்மை அற்றது என்பதால் மக்கள் அச்சம் அடைய வேண்டிய அவசியம் இல்லை" என்றனர்.
கடந்த காலங்களில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இரண்டு முறை பாம்புகள் தென்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐஐடியில் உள்ள செக்யூரிட்டி, பாம்பை பிடித்து அருகே உள்ள கிண்டி தேசிய பூங்காவில் விட்டதாகவும் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் எதையும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பிறகு கடந்த மாதம் 23 ஆம் தேதியும் பாம்பு தென்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னைக்கு வந்தது எப்படி?: இந்தியாவில் நிகோபார் தீவுகளில் மட்டுமே இருக்கும் இந்த மலைப்பாம்புகள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் வந்தது எப்படி என்பது குறித்து பல்வேறு விதமான கருத்துகள் உலா வருகின்றன. சென்னையில் உள்ள பாம்பு பூங்காவில் இருந்து குட்டியாக இருக்கும் போது இந்த பாம்பு தப்பித்து இருக்கலாம் என்றும் பின்னர் இனப்பெருக்கம் செய்து இருக்க சாத்தியம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இல்லையென்றால் சிலர் செல்லப்பிரணியாக வளர்த்து விட்டு மாட்டாமல் இருப்பதற்காக ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் பாம்பை விட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி சென்னையில் உள்ள பாம்பு பூங்கா இயக்குனர் ஆர். ராஜரத்தினம் கூறுகையில், இந்த இளம் மலைப்பாம்பு பாம்பு பூங்காவில் இருந்து தப்பித்து இருப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை" என்றார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications