ஐஐடி-யில் பிடிபட்ட உலகின் நீளமான இன மலைப்பாம்பு.. சென்னைக்கு வந்தது எப்படி? அதிகாரிகள் திகைப்பு
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு பிடிப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நிகோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் இந்த மலைப்பாம்புகள் சென்னை ஐஐடிக்குள் வந்தது எப்படி என்பது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலகின் நீளமான இனத்தை சேர்ந்த மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. 7 முதல் 8 அடிகள் கொண்ட இந்த மலைப்பாம்பு குட்டி கிண்டி தேசிய பூங்கா அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. வரிக்கோடுகள் கொண்ட இந்த மலைப்பாம்பு உலகின் மிக நீளமான இனத்தை சேர்ந்தது ஆகும். அதோடு, அதிக எடை கொண்ட பாம்பு இனங்களில் மூன்றாவது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் நிகோபார் தீவுகளில் மட்டுமே இந்த மலைப்பாம்பு கண்டறியப்பட்டுள்ளது. இனப்பெருக்கத்திற்கான வாய்ப்பு எதுவும் இன்றி இந்த பாம்பு சென்னை ஐஐடிக்குள் வந்தது எப்படி என்பது புதிரை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த வியாழக்கிழமை இரவு ஐஐடி வளாகத்திற்குள் பாம்பு இருப்பதாக எங்களுக்கு அழைப்பு வந்தது.
விஷத்தன்மை அற்றது?: இதையடுத்து உடனடியாக வேளச்சேரி மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பிடிக்கும் இருளர் என மூன்று இடங்களில் இருந்து தலா ஒரு குழு சென்றது. உடனடியாக பாம்பை பிடித்து கிண்டியில் உள்ள பூங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊர்ந்து செல்லும் இந்த மலைப்பாம்புகள் விஷத்தன்மை அற்றது என்பதால் மக்கள் அச்சம் அடைய வேண்டிய அவசியம் இல்லை" என்றனர்.
கடந்த காலங்களில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இரண்டு முறை பாம்புகள் தென்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐஐடியில் உள்ள செக்யூரிட்டி, பாம்பை பிடித்து அருகே உள்ள கிண்டி தேசிய பூங்காவில் விட்டதாகவும் வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் எதையும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பிறகு கடந்த மாதம் 23 ஆம் தேதியும் பாம்பு தென்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னைக்கு வந்தது எப்படி?: இந்தியாவில் நிகோபார் தீவுகளில் மட்டுமே இருக்கும் இந்த மலைப்பாம்புகள் ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் வந்தது எப்படி என்பது குறித்து பல்வேறு விதமான கருத்துகள் உலா வருகின்றன. சென்னையில் உள்ள பாம்பு பூங்காவில் இருந்து குட்டியாக இருக்கும் போது இந்த பாம்பு தப்பித்து இருக்கலாம் என்றும் பின்னர் இனப்பெருக்கம் செய்து இருக்க சாத்தியம் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இல்லையென்றால் சிலர் செல்லப்பிரணியாக வளர்த்து விட்டு மாட்டாமல் இருப்பதற்காக ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் பாம்பை விட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி சென்னையில் உள்ள பாம்பு பூங்கா இயக்குனர் ஆர். ராஜரத்தினம் கூறுகையில், இந்த இளம் மலைப்பாம்பு பாம்பு பூங்காவில் இருந்து தப்பித்து இருப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை" என்றார்.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications