தமிழ்நாட்டில் H1N1 வைரஸ் காய்ச்சல்.. தவறான தகவல் பரப்புகின்றனர்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
சென்னை: H1N1 வைரஸ் காய்ச்சல் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1044 பேர் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் மருத்துவமனையில் 68 பேரும், மீதம் உள்ளவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் H1N1 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனை தமிழக அரசு மறைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் ஏராளமான மலை கிராம மக்கள் உள்ளனர். அவர்களுக்கு மேகாலயாவில் மலைவாழ் கிராம மக்களுக்காக செயல்படுத்தப்படும் மருத்துவ திட்ட செயல்முறைகளை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

அச்சப்பட தேவையில்லை
இதனைத்தொடர்ந்து, H1N1 வைரஸ் தொடர்பாக கடந்த 4 நாட்களாக சொல்லி வருகிறோம். காய்ச்சல் என்பது சாதாரணமாக இருந்துகொண்டே இருக்கும். பருவமழை காலங்களில் காய்ச்சல் அளவு கொஞ்சம் உயரும். இதனை பெரிதாக எடுத்துக்கொண்டு அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளோம்.

மொத்த பாதிப்பு எவ்வளவு?
ஆனால் சிலர் இதனை அதிர்ச்சியாக எடுத்துக்கொண்டு விடுமுறை அளிக்க வேண்டும், தனி வார்டு அமைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இன்று வரை H1N1 வைரஸ் பாதிப்பால் 368 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்றை விட இன்று 4 பேருக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 42 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகள் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விடுமுறை தேவையில்லை
இதில் 89 பேர் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் 264 பேரும், அரசு மருத்துவமனைகளில் 15 பேரும் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது போல் பேசுகிறார்கள். பள்ளிகளுக்கு விடுமுறை தேவை இல்லை என்பது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். இதனை சரியாக பின்பற்ற அறிவுறுத்தி வருகிறோம். பள்ளிகளிலும் மாணவர்கள் யாரேனும் காய்ச்சலுடன் வந்தால், பெற்றோரை வரவழைத்து வீட்டுக்கு அனுப்ப அறிவுறுத்தியுள்ளோம். அதனால் அச்சமடையும் அளவிற்கு பிரச்சினையில்லை என்று தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications