10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை.. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை இலுப்பநத்தம் பகுதியில் வசித்து வருபவர் ரங்கராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி(36). சொந்த ஊர் கரூர்.
இலுப்பநத்தம் திருவள்ளுவர் நகரில் தங்கியிருந்து சொந்தமாக டாக்ஸி ஓட்டி வருகிறார். இவர்களுடைய மகன் நிக்கேஷ் (15). சிறுமுகை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.

மகனை கண்டித்தார்
சிறுவன் நிகேஷுக்கு அவரது தந்தை ரங்கராஜ் செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன் நிகேஷ் செல்போனில் அதிகமாக கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தந்தை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். அதிகமாக செல்போனில் விளையாடிக்கொண்டிருந்தால் படிப்பு கெட்டு விடும் என கூறிய ரங்கராஜ் மகனை கண்டித்ததோடு செல்போனையும் வாங்கிக்கொண்டு கேரளாவிற்கு கடந்த மாதம் 26-ம் தேதி சென்றுள்ளார்.

தூக்குபோட்டு தற்கொலை
அன்று முதல் சிறுவன் நிகேஷ் சோகமாகவே இருந்து வந்துள்ளான். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய மாணவன் நிக்கேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த உமா மகேஸ்வரி வீட்டில் மகன் சேலையில் தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கதறி அழுத தாய்
இதனையடுத்து மாணவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து தாய் உமா மகேஸ்வரி கதறி அழுதுள்ளார். பின்னர் மாணவனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்.

போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications