தெலுங்கில் "மாட்லாடிய" நடிகை கௌதமி.. அதென்ன "ஒரு விரல்".. பூரித்து பார்த்த கோயம்புத்தூர் பொள்ளாச்சி
கோவை: அதிமுக வேட்பாளர்களுக்காக நடிகை கௌதமியின் பிரச்சாரம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன காரணம்?
தெலுங்கு மொழியில் பேசி பொள்ளாச்சி நாடாளுமன்ற கழக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பிரபல திரைப்பட நடிகை கவுதமி..

ஆர்வம்: இதுநாள்வரை பாஜகவில் இடம்பெற்றிருந்த நடிகை கௌதமி, அக்கட்சிக்காக ஒவ்வொரு முறையும் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.. எப்போதுமே கௌதமியின் பிரச்சாரங்கள் பொதுமக்களை கவர்ந்துவிடும்.
குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்தில் வேனை தானாகவே ஓட்டிக்கொண்டு மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு வந்தார்.. பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகனை ஆதரித்து தாராபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கவுதமி பிரச்சார வேனை பத்து கிலோமீட்டர் தூரம் ஓட்டி வந்து மக்களிடம் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார்.
பிரச்சார வேன்: பிரச்சார வேனில், பேச்சாளர்கள் வாக்கு சேகரித்து வரும்நிலையில், வேனையே ஓட்டிக்கொண்டு வந்து பொதுமக்களிடம் வாக்கு கேட்டது வெகுவாக ஈர்த்திருந்தது. அதேபோல, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக, நடிகை கௌதமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, ஆட்டோவை ஓட்டிகொண்டு வந்தார்.
இப்போது பாஜகவிலிருந்து விலகியிருக்கும் கவுதமி, அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார்.. அதிமுக வேட்பாளர்களுக்காகவும் வாக்கு சேகரித்து வருகிறார்.. இந்த முறையும் கௌதமியின் பிரச்சாரங்கள், மக்களை ஈர்த்து வருகின்றன.
இரட்டை இலை: நேற்றுகூட பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... மதுக்கரை மார்க்கெட், குளத்துப்பாளையம், ஆலாந்துறை, தென்னமநல்லூர், தேவராயபுரம் உள்ளிட்ட இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
ஆலாந்துறை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அங்கிருந்த பொதுமக்களுக்கு "யுகாதி பண்டிகை" தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்களை கூறினார். அத்துடன், திடீரென மைக்கைப் பிடித்து தெலுங்கில் பேசி, வாக்கு சேகரித்து ஆரம்பித்துவிட்டார்.
திமுக ஏமாற்றிவிட்டது: "திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்துவிட்டோம்.. இந்த 5 வருடங்களாகவே கஷ்டப்பட்டு வருகிறோம்.. அதனால், மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டுமானால், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயனை வெற்றியடைய செய்யவேண்டும்" என்றார்.
அதுமட்டுமல்ல, "ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், இரட்டை இலைக்கே வாக்களிப்போம்" என்று வெற்றி கோஷத்தை எழுப்பி பொதுமக்களை உற்சாகப்படுத்தினார்.. தெலுங்கில் ஓட்டு கேட்டு வந்த கௌதமியின் இந்த பிரச்சார வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications