‘உங்களை வீட்டுக்கு அனுப்ப அந்த ஒரு வார்த்தை போதும் முதல்வரே’ – கொந்தளித்த வானதி சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுக கூட்டணியும் முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "வந்தே மாதரம் பாடலுக்கு 150 வருடங்கள் ஆகியிருப்பதை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியே முன்னின்று கொண்டாடி வருகிறார். இது கட்சி நிகழ்ச்சியோ, பாஜகவிற்கு சொந்தமான பாடலோ கிடையாது.

Vanathi Srinivasan MK Stalin

வந்தே மாதரம் அனுமதி மறுப்பு

அதைக் கொண்டாடும் வகையில் கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சி சிலை முன்பு, பள்ளி குழந்தைகளுடன் அந்தப் பாடலை பாட திட்டமிட்டிருந்தோம். அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இன்று நடைபெற திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்கு நேற்று இரவு 10 மணிக்கு அனுமதி மறுக்கின்றனர். திமுகவுக்கு பாரத அன்னை என்றால் பிடிக்காது. பாரத் மாதா என்றாலும் பிடிக்காது.

வந்தே மாதரம் பாட்டு பாஜகவுக்கு சொந்தம் அல்ல. அது நாட்டுக்கான பாடல். தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பாடல். சுதந்திர போராட்டத்தில் அதிகளவில் பங்கு வகித்தது நம் தமிழ்நாடு. ஆனால் அதை திமுக அரசு மறந்து விட்டது. எப்போமே தேசபக்திக்கு முன்னுரிமை கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருந்துள்ளது.

ஸ்டாலினுக்கு எச்சரிக்கை

சிறை சாலையில் வ.உ.சி நினைவு இடத்தில் வந்தே மாதரம் பாடல் பாட அனுமதி கேட்டதற்கு காவல்துறை மூலம் அனுமதி மறுக்கிறார்கள். தேச பக்தியை வளர்க்க முயற்சித்தால், அதற்கு மறைமுகமாக மறுப்பு தெரிவித்து தடை போடுகிறார்கள். தமிழகம் எப்போதும் தேசியம் பக்கம் தான் நிற்கும். ஒரு இடத்தில் அனுமதி மறுத்துள்ளதால், ஒவ்வொரு தெருவிலும் நாங்கள் இந்த பாடலை பாட திட்டமிட்டுள்ளோம்.

வந்தே மாதரம் என்ற ஒரு வார்த்தை உங்களை வீட்டுக்கு அனுப்பும் முதல்வரே. தேர்தல் ஆணையத்தின் SIR விவகாரத்தில் மாநில அரசு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இது ஏதோ புதிது கிடையாது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்துள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலில் ஒருவர் கூட வாக்கு உரிமை பறித்து விட்டார்கள் என்ற புகார் தெரிவிக்கவில்லை.

விஜயால் அது முடியாது

நம்முடைய வாக்காளர் பட்டியலை தூய்மையாகவும், நேர்மையாகவும் வைத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தான் இந்த பணியை செய்து வருகிறார்கள். ஆனால் SIR செய்யக்கூடிய படிவங்களை திமுகவினர் வாங்கி பூர்த்தி செய்து வருகிறார்கள். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். திமுக அரசு எவ்வளவு குளறுபடி செய்தாலும் அதை முறியடிப்போம்.

திமுக மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். எல்லா கட்சியையும் தட்டி பார்க்கலாம் என நினைக்கலாம். சினிமா பாடல்களை அரசியலில் பயன்படுத்துவது புதிது கிடையாது. விஜய் திமுகவை எப்படி தனியாக வீழ்த்த முடியும். ஒன்றாக சேர்.. ஒன்றாக சேர்.. என்று சொல்லும் விஜய் யாருடன் சேரப் போகிறார் என்பதை விஜய் தான் சொல்ல வேண்டும்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+