கோவையில் வீடு புகுந்து இளைஞர்களை தாக்கிய சிசிடிவி காட்சி! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
கோயம்புத்தூர்: கோவையில் வீடு புகுந்து இளைஞர்களை ரவுடி கும்பல் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியினரை அதிர்ச்சியை உறைய வைத்துள்ளது.
தொழில் நகரமான கோயம்புத்தூரில், வெளியூர் மாணவர்களும், தொழிலாளர்களும் அதிக அளவில் வசிக்கும் செட்டிபாளையம், ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி பகுதியில், இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மலுமிச்சம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பணி புரிபவர்கள் தனித்தனி அறைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்துத் தங்கி வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே இருசக்கர வாகனங்கள் திருட்டு, லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் மோதல் சம்பவங்களும் இப்பகுதியில் தலைதூக்கி உள்ளன.
இந்தச் சூழலில், நேற்று அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவரை, ரவுடி கும்பலைச் சேர்ந்தவர் ஒருவர் முந்திக் கொண்டு சென்று உள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த ரவுடி கும்பல் ஆத்திரம் அடைந்து, இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்து அவர்களை ஆபாசமாகப் பேசித் தாக்கி உள்ளனர்.
வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் (CCTV) இந்தக் கொடூரத் தாக்குதல் காட்சிகள் பதிவாகி உள்ளன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அத்துமீறிச் செயல்படுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த சி.சி.டி.வி ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வரும் இது போன்ற சமூக விரோதச் செயல்களால் தாங்கள் நிம்மதியாக வசிக்கும் சூழல் இல்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
"உடனடியாகக் காவல்துறையினர் இத்தகைய கும்பலைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்" என்பதே ஒட்டுமொத்தப் பகுதியின் எதிர்பார்ப்பாக உள்ளது.
காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பிக் பாஸ்.. இனி தாறுமாறா போனால் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்தான்! -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்!












Click it and Unblock the Notifications