Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்புத்தூருக்கு சர்ப்ரைஸ்.. கோவை டூ சென்னை வந்தே பாரத் ரயிலில் குட்நியூஸ்! பல நாள் ஆசை நிறைவேறுது

Subscribe to Oneindia Tamil

கோவை: ரயில்களின் தேவை பயணிகளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. அதிலும் வந்தே பாரத் போன்ற ரயில்களின் வருகையானது, ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். நாளுக்கு நாள் புது புது வசதிகளுடன், புது புது சலுகைகளுடன் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவை டூ சென்னை பயணிகள் முன்வைத்து வரும் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படுமா? என்ற ஆர்வம் எழுந்து வருகிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள், கடந்த 2019ல் ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது.

Coimbatore Chennai Vande Bharat Express

ரயிலில் வசதிகள்

வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும்... ஆட்டோமேடிக் கதவுகள், AC, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் போன்று எண்ணற்ற நவீன வசதிகள் உள்ளன. குறுகிய நேரத்தில் எளிதான பயணத்தை மேற்கொள்ளவும் முடிகிறது.

அந்தவகையில், தென்னிந்திய மாநிலங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு முன்பதிவும், வரவேற்பும் அதிக அளவில் காணப்படுகிறது. இதில் 20643 / 20644 என்ற எண் கொண்ட சென்னை சென்ட்ரல் டூ கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் அடங்கும்.


கோவை டூ சென்னை வந்தே பாரத்

இந்த ரயில் கிட்டத்தடட் 495 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் கடந்து விடுகிறது. வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் சென்னை சென்ட்ரல் டூ கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.. ரயிலில் மொத்தம், 598 இடங்கள் உள்ளன. இருமார்க்கங்களிலும் 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலாக இது இயக்கப்பட்டு வருகிறது.

இதில் 7 பெட்டிகள் AC சேர் கார் ஆகவும், 1 பெட்டி எக்ஸிக்யூடிவ் ஏசி சேர் கார் ஆகவும் உள்ளது. எக்ஸிகியூட்டிவ் கட்டணம் பயணி ஒருவருக்கு, 2,310 ரூபாய், AC சேர் கார் கட்டணம், 1,215 ரூபாயாக உள்ளது.

சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தினசரி காலை 6 காலை மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், 11:50க்கு சென்னை சென்றடையும். அதேபோல மதியம் 2:15க்கு சென்னையில் புறப்பட்டு, இரவு 8:15க்கு கோவை வந்தடைகிறது.

16 பெட்டிகள் - சர்ப்ரைஸ் வருமா

அந்தவகையில் வெறும் 6 மணி நேரத்தில் பயண நேரம் உள்ளது. மேலும், இந்த ரயில், சேலம் - சென்னை இடையே எந்த ஸ்டேஷனிலும் நிற்பதில்லை. இதனால் பயணிகளின் ஆதரவு இந்த ரயிலுக்கு அதிகரித்தபடியே உள்ளது.

எனவேதான், வெறும் 8 பெட்டிகளுடன் இயங்கி வரும் வந்தே பாரத் ரயிலை, 16 பெட்டிகள் கொண்டதாக மாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.. ரயில் டிக்கெட் முன்பதிவும் அதிகரித்து விட்டது.. எனவே பண்டிகை காலத்தை கணக்கில் கொண்டாவது, 16 பெட்டிகளாக மாற்ற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்..

விரைவில் குட்நியூஸ்

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, ரயில் டிக்கெட் முன்பதிவு, வருவாய், பயணியர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது.

கோவை - சென்னை வந்தே பாரத் ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிடும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த சர்ப்ரைஸ் தகவலானது, பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+