கைகலப்பு வரை வந்தாச்சு.. கரூர்காரங்களுக்கு கோவையில் என்ன வேலை.. கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

கோவை: ‛‛கோவையில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். இதை தட்டிக்கேட்கும் பாஜகவினர் மிரட்டப்படுவதால் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தி உள்ளார்.

Recommended Video

    கைகலப்பு வரை வந்தாச்சு.. கரூர்காரங்களுக்கு கோவையில் என்ன வேலை.. கொந்தளிக்கும் வானதி சீனிவாசன்

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் நடைபெற உள்ளது. சென்னை, கோவை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்காக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்தனர். இவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சி வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    தீவிர பிரச்சாரம்

    தீவிர பிரச்சாரம்

    திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மநீம தலைவர் கமலஹாசன், பாஜக அண்ணாமலை, காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் அழகிரி உள்பட பல்வேறு கட்சி பிரமுகர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

     பணம் கொடுக்கும் திமுக

    பணம் கொடுக்கும் திமுக

    கோவையில் பல்வேறு இடங்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள்(திமுக) வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதனை கேட்கும் பாஜகவினரை மிரட்டுகின்றனர். இதுபற்றி போலீசில் புகார் அளித்தால் நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனால் சில இடங்களில் கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

     தேர்தல் ஆணையம் நடவடிக்கை

    தேர்தல் ஆணையம் நடவடிக்கை

    எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள கரூர் மாவட்டத்தை சேர்ந்த திமுகவினரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத திமுக இம்முறை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விதிகளை மீறி செயல்படுகின்றனர்.

    அண்ணாமலை பிரசாரம்

    அண்ணாமலை பிரசாரம்

    மக்களின் தேவைகளின் மீது கவனம் செலுத்தாமல் கடைசி நேரத்தில் அதிகார பலத்தால் வாக்காளர்களை மிரட்டி வெற்றி பெற முடியும் என திமுகவினர் நினைக்கின்றனர். மேலும் நாளை முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முழுமையாக கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சிறுவாணி அணைமுழு கொள்ளளவை எட்டுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கோவையில் உள்ள விலங்கியல் பூங்கா முழுமையாக செயல்பட மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்'' என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+