மேட்டுப்பாளையம் துயர நிகழ்வு... மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்
Recommended Video
கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து உயிரிழந்த 17 பேரின் உறவினர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறி தேற்றினார்.
மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியில் மழை காரணமாக 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக 17 பேர் நேற்று காலை உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

நேரில் சந்திப்பு
மேட்டுப்பாளையம் நடூர் காலனிக்கு இன்று காலை சென்ற மு.க.ஸ்டாலின் சுவர் இடிந்து விழுந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது அவரது கரங்களை பற்றி கண்ணீர் விட்டு அழுத 17 பேரின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறி அவர்களை தேற்றினார். ஸ்டாலினிடம் நடூர் காலனி மக்கள் சுவர் எழுப்பப்பட்ட விவகாரத்தை விரிவாக விளக்கினர்.

ஸ்டாலின் ஆறுதல்
மேலும், ஒரு சிலர் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணீர் ஓலமிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிய ஸ்டாலின், நியாயம் கிடைக்க தாம் உறுதுணையாக இருப்பேன் என உறுதியளித்தார். மேலும், அவர்களை கவலைகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

அரசுப்பணி
பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய பின்பு, மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், இழப்பீடு போதாது எனவும் கூறினார்.

பாய்ச்சல்
மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நியாயம் கேட்டு போராடிய போது அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்றும், காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் ஆட்டுவிப்பது யார் எனக் கேள்வி எழுப்பினார்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications