எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்.. என் நிலைமையப் பாருங்கடா.. கோவை புள்ளிங்கோ மாணவரின் பரிதாபம்
கோவை: பெற்றோர் பேச்சை கேட்டு ஒழுக்கமாக படிக்க வேண்டும். படிக்கும் காலத்தில் கத்தி எடுத்துக் கொண்டு சுற்றியதால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழ வைத்து கடவுள் தன்னை தண்டித்துவிட்டதாக காவல் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் கல்லூரி மாணவர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
பொதுவாக கல்லூரி செல்லும் மாணவர்கள் என்றாலே சேட்டைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். தனது நண்பர்களுடன் சேர்ந்துவிட்டாலே பள்ளி, கல்லூரி, பேருந்து என அனைத்துப் பகுதிகளிலும் பாட்டு, நடனம், கலாய்ப்பதில் ஈடுபடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சில நேரம் காவல் துறையினர் இதனை கண்டிப்பதும், அட்வைஸ் செய்து அனுப்பி வைப்பதும் வழக்கம்.

இவை அனைத்துமே எல்லை மீறாத வரையில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. ஆனால், பொதுமக்களுக்கு, மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், கோவை தனியார் கல்லூரியில் கத்தியை சுழற்றி கெத்துக் காட்டி மாவுக்கட்டு வாங்கிய மாணவரின் பரிதாப நிலை குறித்த வீடியோ தப்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
ஓணம் பண்டிகையையொட்டி, கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தையொட்டி உள்ள மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளதால் இங்குள்ள கல்லூரிகளில் கேரள மாணவ, மாணவிகளும் ஏராளமானோர் படித்து வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியிலும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
ஓணம் கொண்டாட்டத்தின்போது ரோகித் என்ற இளைஞர் திடீரென கத்தியைச் சுழற்றி மாணவர்களை அச்சுறுத்தியுள்ளார். இதில், 3 மாணவர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த சூலூர் போலீஸார் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரியின் முன்னாள் மாணவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கல்லூரியின் முன்னாள் மாணவர் வாகன விபத்து ஒன்றில் சிக்கி கை உடைந்த நிலையில் போலீஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக, போலீஸார் காவல் நிலையத்தில் ரோகித்திடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கல்லூரி நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாகவும், பழைய ஐடி கார்டை காட்டி ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், அப்போது மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துச் சுழற்றி மாணவர்களைத் தாக்கியயுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்த ரோஹித், எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என சினிமா வசனத்தைப் பேசியதோடு, படிக்கும் காலத்தில் சரியாக படிக்காமல் கத்தி எடுத்ததால்தான் இந்த நிலைமைக்கு வந்துவிட்டேன். இந்த செயலுக்காக கடவுள் தன்னை பைக்கில் இருந்து கீழே விழ வைத்து கையை உடைத்து விட்டதாகவும் வேதனையுடன் பேசியுள்ளார்.
மாணவர்கள் படிக்கும் காலத்தில் பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க வேண்டும். தவறான செயல்களில் ஈடுபடாமல் நல்வழியில் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னாள் மாணவர் ரோகித் பேசும் இந்த வீடியோவை போலீஸார் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வேகமாப் பரவி வருகிறது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications