ரேஷன் கார்டு.. கோவை மக்களே நீண்ட நாள் காத்திருப்புக்கு பலன்.. வீடு தேடி வரும் நல்ல செய்தி
கோவை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலில் உள்ளதால் கோவை மாவட்டத்தில் பலரும் புதிய ரேஷன் கார்டு கேட்டு ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 7 ஆயிரம் பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், சரிபார்த்து ஆய்வு செய்து பரிசீலனை செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பலரும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் தனியாக பிரித்து தனி ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1405 ரேஷன்கடைகள் உள்ளன. இங்கு 11.02 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கின்றன..

இந்நிலையில் கடந்த சில மாங்களாக கோவை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டுகள் வழங்க கோரி அந்தந்த பகுதிகளில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பித்துள்ளனர்.ஆன்லைன் வாயிலாகவும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.
ரேஷன்கார்டு தாரர்களில் திருமணமான பலர் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பம் செய்து, புதிய ரேஷன்கார்டு வழங்க க்கோரி விண்ணப்பம் செய்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் 7 ஆயிரம் பேர் புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளார்களாம்.. அவற்றை சரிபார்த்து ஆய்வுசெய்து பரிசீலனை செய்யும் பணியில் அதிகாரிகள் விறுவிறுப்பாக இறங்கி உள்ளனர்.
முன்பு ரேஷன் கார்டுகள் புத்தக வடிவில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுவதால் அவை சென்னையில் மட்டுமே தயராகுவதால் அங்கிருந்த தமிழகத்தின்அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியானவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை காரணமாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தவர்களுக்கு கிடைக்க போகிறது.
கோவையில் புதிய ரேஷன்கார்டுகள் கோரி இதுவரையில் 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் தகுதியுடைய அனைவருக்கும் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படும் என்று குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.. கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வீடு தேடி வரப்போகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications