ரேஷன் கார்டு.. கோவை மக்களே நீண்ட நாள் காத்திருப்புக்கு பலன்.. வீடு தேடி வரும் நல்ல செய்தி
கோவை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலில் உள்ளதால் கோவை மாவட்டத்தில் பலரும் புதிய ரேஷன் கார்டு கேட்டு ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 7 ஆயிரம் பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில், சரிபார்த்து ஆய்வு செய்து பரிசீலனை செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பலரும் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள் தனியாக பிரித்து தனி ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 1405 ரேஷன்கடைகள் உள்ளன. இங்கு 11.02 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கின்றன..

இந்நிலையில் கடந்த சில மாங்களாக கோவை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டுகள் வழங்க கோரி அந்தந்த பகுதிகளில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பித்துள்ளனர்.ஆன்லைன் வாயிலாகவும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.
ரேஷன்கார்டு தாரர்களில் திருமணமான பலர் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பம் செய்து, புதிய ரேஷன்கார்டு வழங்க க்கோரி விண்ணப்பம் செய்து வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களில் 7 ஆயிரம் பேர் புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து உள்ளார்களாம்.. அவற்றை சரிபார்த்து ஆய்வுசெய்து பரிசீலனை செய்யும் பணியில் அதிகாரிகள் விறுவிறுப்பாக இறங்கி உள்ளனர்.
முன்பு ரேஷன் கார்டுகள் புத்தக வடிவில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படுவதால் அவை சென்னையில் மட்டுமே தயராகுவதால் அங்கிருந்த தமிழகத்தின்அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியானவர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை காரணமாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கி உள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தவர்களுக்கு கிடைக்க போகிறது.
கோவையில் புதிய ரேஷன்கார்டுகள் கோரி இதுவரையில் 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் தகுதியுடைய அனைவருக்கும் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படும் என்று குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.. கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வீடு தேடி வரப்போகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications