சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பியவர்கள்...அரசுப் பள்ளியில் படித்தவர்கள்... மயில்சாமி அண்ணாதுரை
கோவை: அரசுப் பள்ளியில் படித்த விஞ்ஞானிகளே சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்திருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
அரசு பள்ளிகளை பாதுகாக்க வேண்டும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை, கோவை, கடலூர், கன்னியாகுமரி ஆகிய 4 இடங்களில் சைக்கிள் பேரணி நடத்தினர்.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே சைக்கிள் பேரணி தொடங்கியது. இதனை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத்தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை, சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி, அரசுப் பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்ததாக தெரிவித்தார்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு திறமையும் தகுதியும் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அரசுப் பள்ளியில் படித்த விஞ்ஞானிகளே சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்ததாக தெரிவித்தார். எனவே, அரசுப் பள்ளியிலும், அன்னைத் தமிழிலும் பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோர் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதைய அரசு பள்ளி பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இதனை சரியாக பயன்படுத்த ஆசிரியர்களும், பெற்றோர்களும், அரசும் ஊர்கூடி தேர் இழுக்கவேண்டியிருப்பதாகவும் கூறினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications