ஓசூர் விமான நிலையம்.. மத்திய அரசு ஆலோசிக்கிறது.. ஒரே வாரத்தில் ராம் மோகன் நாயுடு புது விளக்கம்!
கோவை: ஓசூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசித்து வருவதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முழு ஒப்புதல் கொடுத்துவிட்டதாக கூறிய ராம் மோகன் நாயுடு, தமிழ்நாட்டிற்கு தனி கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தூத்துக்குடி பின் ஓசூர் மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை கண்டு வருகிறது. ஏற்கனவே டிவிஎஸ், டாடா, ஏதன், ஓலா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஓசூரில் தொழிற்சாலைகளை அமைத்திருக்கின்றன. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி எளிமையாக்கும் வகையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டது.

ஓசூரில் பேரிகை பாகலூர் பகுதியில் விமான நிலையத்தை அமைக்கலாம் என்று முடிவு செய்து தமிழக அரசு திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது. ஓசூரில் விமான நிலையம் வந்தால், அதனை சுற்றியுள்ள மாவட்டங்களும் வேகமாக வளர்ச்சியை பெறும். அதேபோல் பெங்களூர் வளர்ச்சிக்கும் தமிழக அரசால் எளிதாக சவால் அளிக்க முடியும்.
இதனால் ஓசூர் விமான நிலையம் மீதான எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்தது. ஆனால் தமிழக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமான நிலையத்தால் செயல்படுத்தப்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்தது.
இது தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் Udaan Yatri Cafe மற்றும் புதிய வசதிகளை தொடங்கி வைக்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வந்தார். இதையடுத்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் ஜிஐ டேட் பெற்ற பொருட்கள், கோவை கோரா காட்டன் விற்பனை நிலையம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி மற்றும் நூலகம் ஆகியவை திறக்கப்பட்டது.
அப்போது ராம் மோகன் நாயுடு பேசுகையில், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக முழு ஒப்புதல் கொடுத்துவிட்டோம். ஓசூர் விமான நிலையம் தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். பிரதமர் மோடி கோவைக்கும், தமிழ்நாட்டிற்கும் தனி கவனம் செலுத்தி வருகிறார் என்று தெரிவித்தார். கடந்த வாரம் ஓசூர் விமான நிலைய திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கத்தை அளித்த ராம் மோகன் நாயுடு, இப்போது திடீரென ஆலோசனையில் இருப்பதாக கூறி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications