பொள்ளாச்சி அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய ஆசாமி.. போலீஸாக மாறி நடத்துனர் செய்த தரமான சம்பவம்
கோவை: கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர், பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி சென்றார். நடத்துனர் மற்றும் பொது மக்கள் துரிதமாக செயல்பட்டு அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா, உள்ளிட்ட போதை பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காவல்துறை அதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் புதிய புதிய வழிகளில் போதை பொருள்களை கடத்தி விற்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் போதை பழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அண்மை காலமாக புதிய புதிய போதை பொருள்கள் புழக்கத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் போதை பொருள்கள் கொண்டு வரப்படுகின்றன.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஜா உசைன் ( வயது 45). இவர் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பழனியில் இருந்து பாலக்காடு செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்தில் ஏறியுள்ளார். அவரது கையில் இரண்டு பைகள் இருந்துள்ளன . பேருந்து தமிழ்நாடு – கேரளா எல்லையான கோபாலபுரம் காவல்துறை சோதனை சாவடியை கடக்கும் வரை எந்தப் பிரச்னையும் இல்லை.
செக் போஸ்ட் அருகே சென்றபோது பேருந்தின் நடத்துனர், காஜா உசைனிடம் இரண்டு பைகளுக்கு லக்கேஜ் டிக்கெட் எடுக்க சொல்லியுள்ளார். பையில் என்ன இருக்கிறது என்று நடத்துனர் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் உடனடியாக ஓட்டுநரை காவல்துறையின் சோதனை சாவடியில் நிறுத்த சொல்லியுள்ளார்.
அப்போது காஜா உசைன் மதுபோதையில் இருந்துள்ளார். சிக்கி கொண்டதை உணர்ந்த அவர் பைகளை விட்டுவிட்டு, ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியாக குதித்து தப்ப முயற்சித்தார். இதையறிந்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் உடனடியாக காஜா உசைனை விரட்டி சென்று பிடித்துவிட்டனர்.
தொடர்ந்து அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறை அவர் மீது வழக்குபதிந்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவரிடம் 17 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவர் யார், அவரின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் தமிழ்நாடு எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications