கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்
கோவை: ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் போர் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கடல் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக இன்று (10.3.26) முதல் உணவு மெனு பட்டியலை குறைப்பதாக அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்டு அன்னபூர்ணா உணவகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 50 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த உணவகம் கோவையில் மிகவும் பிரபலமானது. இவர்களுக்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கிளைகள் செயல்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரியால் உணவுப் பொருட்கள் விற்பனையில் உள்ள சவால்களை, அன்னபூர்ணா உணவகத்தின் இயக்குநர் சீனிவாசன் பேசியது இந்தியா முழுவதும் வைரலானது.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கூட இடைவிடாமல் இயங்கும் அன்னபூர்ணா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் புவிசார் அரசியல் நெருக்கடி காரணமாக எல்பிஜி எரிவாயு விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் எல்பிஜி சமையல் எரிபொருள் கிடைப்பதில் தினசரி குறைபாடுகளை எதிர்கொண்டு வருகின்றோம்.

சேவையில் பாதிப்பு
இது எங்கள் சேவையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சேவையை முழுமையாக நிறுத்தாமல் தற்காலிக மாற்று நடவடிக்கைகளை அமல்படுத்தப்படுகிறோம். அதன்படி அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்து. அதற்கேற்ப ஹோட்டலின் உணவு மெனு பட்டியல் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு பொருட்கள் கிடைக்கும் நேரங்களிலும் மாற்றம் இருக்கலாம்.
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் அதிர்ச்சி
இந்த நடைமுறை இன்று (10.3.26) முதல் அமல்படுத்தப்படுகிறது. சமையல் எரிவாயு முழுமையான விநியோகத்தை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசு மற்றும் விநியோகத்தர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றோம். சூழ்நிலையை புரிந்து எப்போதும் போல ஆதரவு வழங்க வேண்டுகிறோம். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்துக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications