300 கோடி ரூபாய் மோசடி.. கோவையில் மிஸ்டர்.டுபாக்கூர் மீது பகீர் புகார்.. ட்ரேடிங் ஆப் பரிதாபங்கள்..!

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவையில் டிரேடிங் ஆப் மூலம் அதிகளவு சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து ஏமாற்றிய யூடியூபரான மிஸ்டர்.மணி என்ற விமல் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமானோர் புகார் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போதைய செல்போன் யுகத்தில் வேலைகள் அனைத்தும் எளிதாகி விட்டது போல, உழைப்பில்லாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடத்தில் அதிகமாகி வருவது போலவே மோசடிகளும் அதிகமாகி வருகின்றன.

நூற்றுக்கணக்கான ஆன்லைன் கேம்கள் மூலம் வீட்டிலிருந்தே லட்சாதிபதி ஆகிவிடலாம் என விளம்பரங்களைத் மாற்றி மாற்றி காண்பித்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும் கும்பல்களும் அதிகரித்து வருகிறது.

கோவையில் மோசடி

கோவையில் மோசடி

இதேபோல்தான் கோவையில் யூடியூப் சேனல் மூலம் மக்களை ஏமாற்றி 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த நபர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் யூடியூப் சேனல் நடத்தி வரும் நபர் டிரேடிங் ஆப் மூலம் அதிகளவு சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து ஏமாற்றிய யூடியூபரான மிஸ்டர்.மணி என்ற விமல் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமானோர் புகார் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் குமார் என்பவர் தான் தற்போது இந்த மோசடிப் புகாரில் சிக்கி பரபரப்பை கூட்டி உள்ளவர்.

மிஸ்டர்.மணி சேனல்

மிஸ்டர்.மணி சேனல்

விமல்குமார் என்பவர் மிஸ்டர்.மணி என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சேனலில் நேரலை செய்கிறேன் எனக்கூறி காளப்பட்டி பகுதிக்கு அவ்வப்போது செல்லும் விமல்குமார் அங்குள்ள பொது மக்களிடம் பணத்தை போரெக்ஸ் டிரேடிங் எனப்படும் ஆன்லைன் ஆப்-ல் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதையடுத்து அவரிடம் பலரும் பணம் செலுத்தி தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். அப்போது அதிக பணம் கிடைத்ததால் ஆசையில் தொலைத்து மகிந்த விமல் குமார் தமிழகம் முழுவதும் தனது ஆக்டோபஸ் வலையை விரிக்கத் தொடங்கியுள்ளார். கோவை மட்டுமல்லாது திருச்சி தஞ்சாவூர் திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் மாவட்டம்தோறும் அலுவலகங்களை அமைத்துள்ளார்.

இண்ட்ரோ ப்ரோக்கர்

இண்ட்ரோ ப்ரோக்கர்

இண்ட்ரோ ப்ரோ எனப்படும் அறிமுக புரோக்கர்களை நியமித்து மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியமும் விமல் அளித்துள்ளார். 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது என ஆர்வத்துடன் பணியாற்றியவர்கள் மாநிலம் முழுவதும் சுமார் 300 பேரை திரட்டி ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளனர். அதிகமான பணம் கைக்கு கிடைத்ததை அடுத்து வேலையில் அமர்த்தியவர்களுக்கு சம்பளம் வழங்காத மிஸ்டர்.மணி எனப்படும் விமல் குமார், முதலீட்டாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தராமல் நீண்ட காலம் இழுத்தடித்து வந்துள்ளார். இதையடுத்து ஊழியர்களும் பாதிக்கப்பட்டோர் மிஸ்டர் மணி விமல் குமாரையும் அவரது மனைவியையும் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் போனது.

ஆட்சியரிடம் புகார்

ஆட்சியரிடம் புகார்

இதையடுத்து தங்களிடம் பணம் பெற்ற நபர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அதுவும் தோல்வியில் முடிந்ததை அடுத்து கோபம் அடைந்த, மதுரை தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் பாதிக்கப்பட்டது குறித்து புகார் அளித்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் அவர் அளித்த புகார் அளித்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+