நீலகிரி, கோவையில் கொட்டி தீர்த்த கனமழை! நாளையும் தொடருமாம்.. வெதர்மேன் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் இன்று நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்திருக்கிறது. நாளையும் கனமழை தொடரும் என வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதன்படி பார்சன்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் 384 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.

"மலைப்பகுதிகளில் நாளையும் மழை நீடிக்கும். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகள், தமிழ்நாட்டு, கர்நாடாக மற்றும் கேரளாவின் மலைப்பகுதிகள் கனமழை பெய்திருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை,
பார்சன்ஸ் பள்ளத்தாக்கு - 384 மி.மீ
அவலாஞ்சி - 215 மி.மீ
ஓவேலி ARG - 107 மி.மீ
எமரால்டு - 94 மி.மீ
நெல்லியம் - 94 மி.மீ
பந்தலூர் - 93 மி.மீ
முக்கூர்த்தி அணை - 90 மி.மீ
வென்ட்வொர்த் எஸ்டேட் - 90 மி.மீ
தேவாலா - 87 மி.மீ
நடுவட்டம் ஏஆர்ஜி - 85 மி.மீ
அப்பர் பவானி - 74 மி.மீ
கூடலூர் - 71 மி.மீ
மேல் கூடலூர் - 70 மி.மீ
என மழை பதிவாகியிருக்கிறது. அதேபோல கோயம்புத்தூர் மாவட்டத்தை பொறுத்த அளவில்
சின்னகல்லார் - 137 மி.மீ
பெரியகல்லார் - 101 மி.மீ
லோயர் நிரர் - 95 மி.மீ
சிறுவானி அணை - 85 மி.மீ
சிறுவானி அடிவாரம் - 73 மி.மீ
சோலையார் - 73 மி.மீ
இது தவிர காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு
ஹேமாவதி அணை நீர்பிடிப்பு பகுதிகள்
கொட்டிகெஹெரா, சிக்மகளூரு - 207 மி.மீ
பனகல், சிக்மகளூரு - 193 மி.மீ
கேஆர்எஸ் அணை நீர்ப்பிடிப்பு
தலைக்காவிரி, கூர்க் - 184 மி.மீ
பாகமண்டலா, கூர்க் - 168 மி.மீ
கெத்முல்லூர், கூர்க் - 155 மி.மீ
கடனூர், கூர்க் - 132 மி.மீ
செம்பேபெல்லூர், கூர்க் - 121 மி.மீ
ஓசூர், கூர்க் - 116 மி.மீ
பிலுகுண்டா, கூர்க் - 114 மி.மீ
கோனிகொப்பா, கூர்க் - 112 மி.மீ
கபினி நீர்ப்பிடிப்பு
வைத்திரி, வயநாடு - 148 மி.மீ
தரியோட், வயண்ட் - 118 மி.மீ
கர்நாடகா
அகும்பே, ஷிமோகா - 185 மி.மீ
ஹுலிகல், ஷிமோகா - 179 மி.மீ
கேரளா
கக்காயம் அணை, கோழிக்கோடு - 140 மி.மீ
என மழை பதிவாயிகிருக்கிறது" என்று வெதர்மேன் பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications