ஆஹா..ஆஹா.. மைல்கல்லுக்கு மாலை போட்டு படையல்! நம்ம ஊர் கோவைல தான்! கோவை குசும்பு இது தானா?
கோவை : ஆயுதபூஜையையொட்டி கோவை தொண்டாமுத்தூர் பூலுப்பட்டி அருகே மைல்கல்லுக்கு சிறப்பு பூஜை செய்து வாழை இலை போட்டு படையலிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் பகுதி உள்ள பொதுமக்கள் ஆயுத பூஜை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.

பேரூர் சிறுவாணி சாலை பூலுவபபட்டி பகுதியில் அமைந்துள்ள பழைய மைல் கல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து புதிய மைல்கல் அங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் உற்சாகமான அப்பகுதி மக்கள் மைல்கல்லுக்கு சிறப்பு பூஜை செய்து வாழை இலை போட்டு படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர். வாழை இலையில் படையல் பொறி, கடலை, பழங்கள் வைத்து வழிபாடு செய்தனர்.
மேலும் ஆயுத பூஜை என்பதால் மைல் கல்லுக்கு புது வண்ணம் பூசி வாழை மரக்கன்றுகள் கட்டி சந்தன பொட்டு திருநீர் குங்குமம் பூசி மாலை அணிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்ததாக பகுதி மக்கள் கூறினர். இதனையடுத்து அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications