ஓட்டு சதவீதம் பறக்குதே.. மாற்றத்தை நோக்கி பயணிக்கும் மக்கள்! எக்கச்சக்க மகிழ்ச்சியில் எல்.முருகன்!
கோவை: மக்கள் மாற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டனர் மதியத்துக்குள் 40% வாக்குப்பதிவு அதனை வெளிப்படுத்துகிறது எனவும், மக்கள் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களிக்க தொடங்கிவிட்டனர் என அவிநாசி தொகுதி வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன் அன்னூரில் கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாலையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடைபெற்று வரும் வாக்கு பதிவு குறித்து அவிநாசி தொகுதி வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல் முருகன் நேரில் வந்து வாக்குசாவடி முகவர்களை சந்தித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தங்களது வாக்காளர்களை முழுமையாக வாக்கு செலுத்த முனைப்பு காட்டுகிறார்களா என கட்சி நிர்வாகிகளை சந்தித்து கேட்டறிந்தார். மேலும் வாக்கு செலுத்தி விட்டு வந்த மக்களிடம் கலந்துரையாடினார்
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன்," மக்கள் காலை முதலை மிக விறுவிறுப்பாக தங்களது ஜனநாயக கடமையான வாக்குகளை செலுத்து வருகின்றனர். அவிநாசி சட்டமன்ற தொகுதியில் 12 மணி அளவில் 40 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது மக்கள் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களிக்க தொடங்கி விட்டனர். இது ஆட்சி இருள் சூழ்ந்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மாற்றத்திற்கான ஒரு சமிக்கையாகவே இருப்பதாக" அவர் தெரிவித்தார்.













Click it and Unblock the Notifications