கோவை ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கும் போது அதிர்ச்சி.. விமானி அறையில் லேசர் லைட் அடித்து அட்டகாசம்
கோவை: பெங்களூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இண்டிகோ விமானம் தரை இறங்கும் போது விமானி அறையில் லேசர் லைட் அடித்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடு என ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு 7.50 மணிக்கு பெங்களூரில் இருந்து வந்த இண்டிகோ விமானம், தரையிறங்க 3.5 கிலோமீட்டர் தூரம் இருக்கும் பொழுது, தரையில் இருந்து விமானி அறையின் வலது பக்கத்தில் லேசர் லைட் அடித்துள்ளனர்.

தரையில் இருத்து விமானத்திற்கு லேசர் லைட் அடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக , விமானம் தரையிறங்கிய பின்னர் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானி கூகுள் மேப்பை பார்த்து அந்த இடம் மைலம்பட்டி அல்லது வெள்ளானைப்பட்டியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ள நிலையில், பீளமேடு போலீசார் தீவிர விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானத்தை தரையிறக்கும்போது விமானிகள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கும். அந்தத் தருணத்தில் இதுபோன்ற லேசர் ஒளிக்கற்றைகளை அடிப்பது விமானிகளைத் தடுமாறச் செய்யும். விமானிகள், ஓடுபாதையை விட்டு விலகித் தரையிறக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
சக்தி வாய்ந்த லேசர் ஒளியை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்தால் விமானிகளுக்கு தற்காலிக பார்வையிழப்பும் ஏற்படக் கூடும். இது தரையிறங்கும் நேரத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், விமானங்கள் தரையிறங்கும்போது லேசர் ஒளி பாய்ச்சப்படுவது மிக மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications