கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாலையில் நின்ற பைக் மீது வேகமாக வந்து மோதிய கார்...காற்றில் பறந்த இருவர் - பதற வைக்கும் வீடியோ

பொள்ளாச்சி அருகே பைக் மீது கார் மோதியதில் பைக்கில் சென்ற இருவர் காற்றில் பறந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

கோவை: சாலை விபத்துக்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடுகின்றன. எதிர்பாராத நேரத்தில் நடக்கும் சாலை விபத்துக்களால் விலை மதிப்பில்லாத உயிர்கள் பறிபோகின்றன. பொள்ளாச்சி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பறந்து போய் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

Recommended Video

    சாலையில் நின்ற பைக் மீது வேகமாக வந்து மோதிய கார்...காற்றில் பறந்த இருவர் - பதற வைக்கும் வீடியோ

    விபத்தில் சிக்கியவர்களின் பெயர் ஜோதீஸ்வரன் மற்றும் ராஜசேகரன் என்பதாகும். கோவை அருகே உள்ள மதுக்கரை பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஆங்காங்கே உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்காக மதுக்கரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

     Pollachi car bike accident caught on cctv footage video

    பொள்ளாச்சி - உடுமலை சாலையில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது ஜி. சங்கம்பாளையத்தை சேர்ந்த கௌதம் என்பவர் காரில் பொள்ளாச்சி நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக பைக் மீது கார் மோதியது. இதில் ஜோதீஸ்வரன், ராஜசேகர் இருவரும் தூக்கி வீசப்பட்டு பறந்து சென்று கீழே விழுந்தனர். இந்த விபத்தை பார்த்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் ராஜசேகர் சிறிய காயங்களுடன் தப்பினார். ஜோதிஷ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தனிமையில் விதவை பெண்.. 3 முறை அபார்ஷன்.. கொதித்தெழுந்து நடத்திய தர்ணா.. எகிறி தப்பிய இளைஞர்..!தனிமையில் விதவை பெண்.. 3 முறை அபார்ஷன்.. கொதித்தெழுந்து நடத்திய தர்ணா.. எகிறி தப்பிய இளைஞர்..!

    இந்த விபத்து கிழக்கு காவல் நிலைய போலீசார் காரை ஓட்டி வந்த கௌதம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையை கடக்கும் போது நில் கவனி செல் என்று சொல்வார்கள். நான்கு வழிச்சாலைகளை கடக்கும் போது அதிக கவனம் தேவை. வாகன ஓட்டிகள் மிதவேகம் மிக நன்று என்பதை மறந்து பறந்து போக விரும்புவதால்தான் இதுபோன்ற விபத்துகள் நேரிடுகிறது.

     Pollachi car bike accident caught on cctv footage video

    பக்தர்களுக்கு உதவி செய்ய சென்றவர்கள் கொஞ்சம் கவனத்தோடு சாலையை கடந்திருக்கலாம். நடு சாலையில் பைக்கை நிறுத்தியதால் வேகமாக வந்த கார் மோதி விபத்தில் சிக்க நேரிட்டுள்ளது.

    English summary
    Pollachi car bike accident : (பொள்ளாச்சி பைக் கார் மோதி விபத்து) A two-wheeler near Pollachi was trying to cross the road when it was hit by a speeding car and fled.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X