சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்!

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்பட்ட திட்டங்களை விட அறிவிக்கப்படாத சர்ச்சைகள் தான் ஏராளமான உள்ளன. முதலமைச்சர் விஜயும், அமைச்சர்களும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் மோகத்துடன் வலம் வருவது, சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவது நடந்து வருகிறது. கோவையில் சமூக நீதி விடுதியில் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் சம்பத்குமார் அதிர்ச்சியடைந்தார். அங்கு என்ன நடைபெற்றது.

தவெக ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தவெக நிர்வாகிகள் சிக்கிய சர்ச்சைகள் அதிகம். தவெக முறையாக ஆட்சி புரிவதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். திடீர் ஆய்வு என்கிற பெயரில் அமைச்சர்கள் அரசுத்துறைகளில் சர்ப்ரைஸ் விசிட்களை நடத்தி வருகிறார்கள். மக்கள் இதை பழகிவிட்ட நிலையில், இந்த ஆய்வுகளில் அமைச்சர்களே இப்போது சர்ப்ரைஸ் ஆகி வருகிறார்கள்.

Minister Social Justice Hostel hostel student

சமூக நீதி விடுதியில் ஆய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான சம்பத்குமார், கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் அரசுப்பள்ளியின்
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்‌. கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொக்கம்பாளையம் கிராமத்தில் செயல்படும் அரசு பள்ளியின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஏராளமான மாணவர்கள் உள்ளனர்.

இரு பாலருக்கும் தனித்தனியாக விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அன்னூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் மாணவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து குறித்து நேற்று இரவு நேரத்தில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக்கு சென்று அங்கு ஆய்வு செய்து மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்‌.

அமைச்சர் ஷாக்

மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து சோதனை செய்தார். பின்னர் உணவு தயாரிக்கும் சமையலறையின் சுகாதாரம் குறித்த பார்வையிட்டு மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனிடையே விடுதியின் மேல் கூரையில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிந்து கொண்டிருந்தன. இதைப் பார்த்த சம்பத்குமார் அதிர்ச்சியடைந்தார். கட்டிடத்தின்
தரம் குறித்து கேட்டறிந்தவர், விரைவில் கட்டிடத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த சம்பவம் அன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+