கோவை நெரிசலுக்கு விடிவுகாலம்..இது மட்டுமல்ல இன்னும் தருவார் முதல்வர்..சொல்வது செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டின் முதல்வர் தொடர்ந்து கோயம்புத்தூருக்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தருவாரென அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோவை: தொழில் வளம் நிறைந்த கோயம்புத்தூருக்கு சாலை போன்ற உட்கட்டமைப்புகள் அவசியமான ஒன்றாகி விட்டது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் முதல்வர் தொடர்ந்து கோயம்புத்தூருக்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தருவாரென அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக பொதுமக்களின் மேம்பாட்டுக்காக இரு மேம்பாலங்களை பொதுமக்களுக்கு திறந்து வைத்தார்.

கோயமுத்தூர் என்றாலே சமீப காலத்தில் நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசல் . மூன்று ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் தெளிவான திட்டமிடல் இல்லாததால், திருச்சி சாலை, , அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி மற்றும் சத்தியமங்கலம் சாலைகள் கடும் போக்குவரத்து நெரிசலாலே ஸ்ம்பித்தன.]

குறிப்பாக அவிநாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலையில் பத்து நிமிடத்தில் இயல்பாக கடக்க வேண்டிய சாலையில் ஒரு மணி நேரம் வரை வாகனம் ஆமை வேகத்திலேயே மெல்ல ஊர்ந்து பயணிக்கும். இதனால் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.

கோவை நெரிசல்

கோவை நெரிசல்

ஆம்புலன்ஸ் , அத்யாவசிய தேவைக்காக பயணிப்பவர்களுக்கு கோயமுத்தூர் சாலைகள் சவாலானதாகவே இருந்து வந்திருக்கின்றன. இந்த நிலையில் மந்தமான மேம்பால பணிகள் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு விரைந்து முடிக்கப்பட்டது.

புது மேம்பாலம் திறப்பு

புது மேம்பாலம் திறப்பு

மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ராமநாதபுரம் - சுங்கம் மேம்பாலம் 238 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக கட்டி முடித்திருக்கின்றனர். இது உக்கடம் புறவழி, பெரிய மருத்துவமனை சாலையை இருபுறங்களிலும், திருச்சி , மதுரை, நெல்லை தென்மாவட்டங்களுக்கான பிரதான சாலையை இணைக்கும் விதமாக கட்டியிருக்கின்றனர்.

 ரூ.60 கோடியில் கட்டப்பட்ட பாலங்கள்

ரூ.60 கோடியில் கட்டப்பட்ட பாலங்கள்

இதே போன்று கவுண்டம்பாளையத்தில் மேட்டுப்பாளையம், உதகை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் போக்குவதத்துக்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 60 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டிமுடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு பாலங்களையும் முதற்கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.

மக்கள் மகிழ்ச்சி

மக்கள் மகிழ்ச்சி

கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி , மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதீப், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி ஆர் நடராஜன், சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், அம்மன் அர்ஜுனன், கேஆர்.ஜெயராமன், துணைமேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர். நீண்ட நாட்களாக வாகன ஓட்டிகள் பாலம் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று பாலம் திறக்கப்பட்டதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பயணித்தனர்.

 நிறைய தருவார் முதல்வர்

நிறைய தருவார் முதல்வர்

தொழில் வளம் நிறைந்த கோயமுத்தூருக்கு சாலை போன்ற உட்கட்டமைப்புகள் அவசியமான ஒன்றாகி விட்டது. என்றும், தமிழ்நாட்டின் முதல்வர் தொடர்ந்து கோயம்புத்தூருக்கு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தருவாரென அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+