செ.ம.வேலுச்சாமிக்கு என்னாச்சு? கட்சியில் இருந்து விலக முடிவு??
Recommended Video
கோவை: கோவை மாவட்ட அதிமுகவில் சீனியரான செ.ம.வேலுச்சாமி ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.மீது கடும் அதிருப்தியில் இருப்பது அண்மைக் கால அவரது செயல்பாடுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2012-ல் கோவை மேயராக இருந்த செ.ம.வேலுச்சாமியை ஜெயலலிதா ராஜினாமா கடிதம் வாங்கிவிட்டு அவரது மேயர் பதவியை பறித்தார். அன்று முதல் லைம்லைட்டில் இருந்து ஒதுங்கியே இருந்த அவர், சூலூர் இடைத்தேர்தல் மூலம் மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.

சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்து நேர்காணலில் கலந்துகொண்டார். கிட்டதட்ட செ.ம.வேலுச்சாமிக்கு தான் சீட் என கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கந்தசாமிக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தனர் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.
இதனால் மனவிரக்தியடைந்த செ.ம.வேலுச்சாமி, இதற்கு மேலும் தாம் அதிமுகவில் இருக்க வேண்டுமா என தனது ஆதரவாளர்களிடம் கேட்டாராம். மேலும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தங்களை அம்மா என நினைத்துக்கொண்டார்களா என பொங்கினாராம்.
கட்சியிலிருந்து விலகலாமா என ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சிலர் செ.ம.வேலுச்சாமியை தொடர்பு கொண்டு பேசினார்களாம். உங்களுக்கு உரிய மரியாதை உரிய நேரத்தில் தரப்படும் என அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்களாம்.
அதற்கு ரியாக்ஷன் காட்டாத செ.ம.வெளிச்சாமி, சூலூர் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டம் உள்ளிட்ட எந்த தேர்தல் பணியிலும் பங்கெடுக்காமல் ஒதுங்கியே உள்ளாராம்.












Click it and Unblock the Notifications