Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரிய கிரகணத்துடன் சூடான கோழிக்கறி - கோவையில் தபெதிக விருந்து! சுவைத்து சாப்பிட்ட மக்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை: மேட்டுப்பாளையம் அருகே சூரிய கிரகணத்தை முன்னிட்டு மூடநம்பிக்கைகளை தகர்க்கும் வகையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் வழங்கிய கோழிக்கறி விருந்தில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் பகுதி சூரிய கிரகணம் தென்பட்டது. இந்தியாவில மாலை 4:29 மணிக்கு தென்படத் தொடங்கிய இந்த சூரிய கிரகணம், சூரிய அஸ்தமன நேரமான 5:42 மணியளவில் இந்த மறைந்தது.

சென்னை, கன்னியாகுமரி, கோவை, ஊட்டி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் சூரிய கிரகணம் தென்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். சூரிய கிரகணம் தென்பட்டதற்காக புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

சிறப்பு வழிபாடுகள்

சிறப்பு வழிபாடுகள்

சூரிய கிரகணத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடை சாத்தப்பட்டன. ஒரு சில கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் மசூதிகளில் நடைபெற்ற சூரிய கிரகண சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

மூட நம்பிக்கை

மூட நம்பிக்கை

கிரகண நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது என்றும், இந்த நேரத்தில் சாப்பிடுவது கூடாது எனவும் பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வருகிறது. மூடநம்பிக்கைகளை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் சாதாரண வானியல் நிகழ்வாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் திராவிட அமைப்புகளை சேர்ந்தவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பெரியார் திடல்

பெரியார் திடல்

அந்த வகையில் திராவிடர் கழகம் சார்பில் சென்னையில் உள்ள பெரியார் திடலில் கிரகண மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்வை நடத்தி இருக்கிறது. கிரகணம் உச்சத்தில் தெரியும் நேரமான மாலை 5:30 மணிக்கு சிற்றுண்டி விருந்து நடத்தப்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்களும் கலந்துகொண்டார்கள். இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்

இதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கிரகண நேரத்தில் கோழிக்கறி குழம்பு செய்து சாப்பிட்டனர். இதில் நல்லிசெட்டிப்பாளையம் கிராம மக்கள் கலந்துகொண்டு தபெதிக அமைப்பை சேர்ந்தவர்கள் வழங்கிய கோழி குழம்பை சோறுடன் சேர்த்து சுவைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+