முடியல.. “மனசு ரொம்ப வலி(மை)க்குது”.. வலிமை தள்ளிப்போனதால் கதறிய கோவை அஜித் ஃபேன்ஸ்
கோவை:
கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில், வலிமை திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள அஜித் ரசிகர்கள் "மனசு ரொம்ப வலிக்குது" என்று நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
Recommended Video
நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது. இதனால், வலிமை 'அப்டேட்' வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் இணையத்தில் 'டிரெண்ட்' செய்து வந்தனர். வலிமை அப்டேட் என்ற வார்த்தையை வைத்து அரசியல் தலைவர்களும் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் அளவுக்கு இந்த வார்த்தை பிரபலமானது.
படத்தின் டைட்டில், மோசன் போஸ்டர், சிங்கில்ஸ், டீசர், டிரைலர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் அவ்வப்போது குஷிப்படுத்தி வந்தது போனி கபூர் தரப்பு. ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொங்கலை வலிமையுடன் கொண்டாட அஜித் ரசிகர்கள் புத்தாண்டு முதல் கண்விழித்துக் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஆசையில் மூனு யூனிட் மணலைக் கொட்டியது கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வலிமை ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் நீண்ட நாட்களாக படத்திற்காக காத்திருந்த அஜித் ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர். இதனிடையே கோவை ரயில் நிலையம் அருகே அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற அஜித் ரசிகரள் வேதனையுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், "ஏமாற்றம்! ஏமாற்றம்!! ஏமாற்றம்!!! மனசு ரொம்ப வலி(மை)க்குது it's ok" என்று அச்சிட்டு தங்களைது கவலையை தெரிவித்துள்ளனர்.
தற்போது போஸ்டரானது சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. ஒரு தரப்பினர் போஸ்டர் ஒட்டிய இளைஞர்களுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் போய் வேற வேலை இருந்தா பாருங்கய்யா என எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
உறக்கம் கலைந்து ஏதேதோ பேசுகின்றனர்.. பிரதமர் மோடியே உண்மையான சமூக நீதி காவலர்.. சொல்வது அண்ணாமலை