ஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசு.. கமல்ஹாசன் பாய்ச்சல்
கோவை: ஏழைகளுக்காக அரசு எதையும் செய்யவில்லை, 50 லட்சம் ஏழைகள் பயன்பெறும் வகையிலான திட்டம் எங்களிடம் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மகேந்திரனை ஆதரித்து கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் தமிழகத்தில் மாற்றத்திற்கான நாள் 18 ஆம் தேதி, அதில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தின் முன்னேற்றத்தில், நாளைய வருமானத்திற்கு நீங்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்றும் மாற்றம் தான் அதற்கு ஒரே வழி எனவும் கூறினார். மக்களை அன்றாடம் காட்சிகளாக வைத்திருப்பது தவறு; நீங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் அதுவாகத்தான் தீரும் என்றும் தயவுசெய்து ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.

இது மாற்றத்திற்கான அரிய வாய்ப்பு என்றும் வாக்களிக்காதவர்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் முக்கியமாக, இளைஞர்கள் வரவேண்டும் எனவும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். மேலும், காவல்துறையை அரசு ஏவல் துறையாக பயன்படுத்தக்கூடாது என்றும் ஏழைகளை அதிகாரிகள் அலைக்கழிக்கக்கூடாது, அவர்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

ஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசுகள் தான் இங்கு உள்ளன என்று விமர்சனம் செய்த கமல்ஹாசன், பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது வருத்தத்தை விட கோபத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications