விடிகாலையில்.. அப்பார்ட்மென்ட்டிற்குள்.. சிக்கிய 4 பெண்கள்.. 2 அண்ணன்களும் உடந்தை.. கோவை ஷாக்
வீடுகளுக்குள் நுழைந்து திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோவை: அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்து பணம், பொருட்களை திருடும் 5 பெண்களை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் சமீப காலமாகவே வீடுகளுக்குள் பொருட்கள், நகைகள், செல்போன்கள் திருடு போவதாக மாநகர போலீசாருக்கு புகார்கள் வந்து கொண்டே இருந்தது.
குறிப்பாக, வெரைட்டி ஹால், செல்வபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 6 மாதமாக அங்கிருக்கும் அபார்ட்மென்ட்களுக்குள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தன

பெண்கள்
அந்த புகார்களின் அடிப்படையில் போலீசாரும், தனிப்படை அமைத்து திருட்டு கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அந்தந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் 4 பெண்கள் சிக்கினர்.

செல்போன்
இவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நுழைந்து, கொஞ்ச நேரத்தில் திரும்பி வெளியே வருவதும், அந்த வீடுகளில் நுழைந்து செல்போன்கள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடி கொண்டு வருவதும் அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது.. ஆட்கள் வீடுகளுக்குள் இருக்கும்போதே இந்த பெண்கள் நுழைந்து திருடி உள்ளனர்..

சிசிடிவி காட்சி
வெரைட்டிஹால் அருகே ஒரு வீட்டில் 2 பெண்கள் வீடுகளுக்குள் நுழைந்த காட்சிகளை வைத்து, அந்த அடையாளங்களின் அடிப்படையில் போலீசார் அவர்களை கைது செய்துவிட்டனர்.. அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் 2 பெண்கள் பெயர்கள் அடிபட்டன.. அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி மற்றும் சௌரியம்மாள் என்பது தெரியவந்தது.. இந்த இருவரின் அண்ணன்கள் 2 பேர் உள்ளனர்.. அவர்கள் அந்து மற்றும் ரமேஷ்.

அண்ணன்கள்
சகோதரிகள் திருடி கொண்டு வந்தால், அந்த பொருட்களை கொண்டு போய் மார்க்கெட்டில் விற்று வருவதுதான் இந்த சகோதரர்களின் வேலையாம்.. பெரும்பாலும் விடிகாலை நேரங்களிலேயே இத்தகைய திருட்டுகள் நடந்துள்ளன... கோவிலுக்கு கூழ் ஊற்ற காணிக்கை வசூல் செய்வது போன்று வீடுகளை நோட்டமிட்டு வருவார்களாம். பிறகு சம்பந்தப்பட்ட வீடுகளில், விடிகாலை நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் உள்ளபோது, இந்த பெண்கள் நுழைந்து திருடுவார்களாம்.. இப்போது அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications