பெட்ரோல் குண்டு வீச்சை தொடர்ந்து.. அபாய எச்சரிக்கை மணி அடிக்கும் இந்து முன்னணி காடேஸ்வரன்
கோவை: தமிழகத்தில் நிகழ்ந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை திருமாவளவன்,சீமான் உள்ளிட்டோர் திசை திருப்ப பார்க்கின்றனர் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மேட்டுப்பாளையத்தில் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காமராஜ் நகர் நாடார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஸ். கல்லூரி மாணவரான இவர் இந்து இளைஞர் முன்னணியின் நகர பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் முன்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 சம்பவங்கள்
மேட்டுப்பாளையத்தில் 2 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும், கார் உடைப்பு உள்ளிட்ட 3 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
அப்போது,பேசிய அவர் தமிழகத்தில் நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு பின்னர் பெரிய கலவரத்தை உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டு சதியும் உள்ளது. பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன்,நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இந்த சம்பவங்களில் இந்து முன்னணியினர், ஆர்எஸ்எஸ் அமைப்பினரே செய்துள்ளதாக அவர்கள் வழக்கை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசாரணை
சரியான விசாரணை செய்யாமலேயே இந்து தான் இச்செயலில் ஈடுபட்டிருப்பார் என திசை திருப்ப பார்க்கின்றனர். போலீஸார் முறையான விசாரணை செய்யவில்லை என்றால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும். பயங்கரவாதிகளுக்கு சிலர் உறுதுணையாக இருக்கின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

நீலகிரி ராசா
மேலும், நீலகிரி எம்பி ஆ.ராசாவின் மேட்டுப்பாளையம் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் ராசா வராமல் இருப்பதே நல்லது. அவர் வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
-
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications