தீபாவளி 2023: கோவை- திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா ரயில் சேவை இன்று அறிமுகம்.. எத்தனை நாள் தெரியுமா?
கோவை: தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் முன்பதிவில்லா ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து லட்சகணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இவர்கள் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ரயில்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் பயணிக்க ஏதுவாக ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறை நாட்களில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்று முன் தினம் முதல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் திருச்சி, கோவை, நெல்லை, குமரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பிவதற்கும் மக்கள் சிரமமே இல்லாமல் பயணிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் நிலையில் தற்போது முன்பதிவில்லா ரயில் சேவை இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவையிலிருந்து திண்டுக்கல் வரை இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது.
கோவையில் காலை 9 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில், மதியம் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். அதே போல் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடையும். மேலும் இந்த ரயில் இன்று முதல் 14 ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications