விளாத்திகுளம் கொடூரம்.. கனிமொழியின் பேச்சு மனிதத் தன்மையற்றது.. கொந்தளித்த நடிகை கௌதமி
கோவை: விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கனிமொழி எம்.பி-யின் பேச்சு மனிதத் தன்மையற்றது என்று நடிகை கௌதமி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையை அடுத்த பச்சாபாளையத்தில் நடைபெற்ற அதிமுக மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், நடிகையுமான கௌதமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: விளாத்திகுளம் வன்கொடுமை, கொலை சம்பவம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பது மனிதத் தன்மையற்றது.

பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஒரு ஆறுதல் கூடக் கூற முடியாத நீங்கள் எப்படி உங்களைத் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும். கரூர் சம்பவத்தில் இரவோடு இரவாக அறிக்கை தந்தவர்கள், விளாத்திகுளம் சம்பவத்தில் மெத்தனமாக இருப்பது ஏன். திமுக ஆட்சியில் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் கஞ்சா மற்றும் சிந்தடிக் போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் மிகப்பெரிய 'பெருமை' என்னவென்றால், போதைப்பொருள் பரவலால் இந்தத் தலைமுறையையும், அடுத்த இரண்டு தலைமுறைகளையும் நாசமாக்கி அழித்ததுதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் எத்தனை முனைப் போட்டி இருந்தாலும், அது திமுக மற்றும் அதிமுக இடையிலான நேரடிப் போட்டியாகவே இருக்கும். மற்றவர்கள் இடையில் வந்த 'தொல்லைகள்' போன்றவர்கள்.
நான்கரை ஆண்டுகளாக மக்களைக் கண்டுகொள்ளாத முதல்வர், தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் வழங்குவது மக்களை வெறும் வாக்கு வங்கியாகப் பார்ப்பதையே காட்டுகிறது. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதும் அவர்களுக்கு வாக்குரிமை வந்துவிட்டது என்பதற்காகத் தான்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகின்றன. காவல் துறையை ஏவி விட்டுப் போராட்டக்காரர்களை ஒடுக்குவதே இந்த ஆட்சியின் வாடிக்கை. மனிதத் தன்மைக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். அது எதிர்வரும் தேர்தலில் கண்டிப்பாகப் பிரதிபலிக்கும் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications