கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்போ கன்பார்மா? திடீரென வந்து இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்! ராஜபக்சே குடும்பத்தினர் எஸ்கேப்? -உண்மையா?

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற போவதாக செய்திகள் வருகின்றன. இப்போது நமல் ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் செல்வதாக சொல்லப்படும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் இந்த செய்தி உறுதி செய்யப்படவில்லை.

Recommended Video

    திடீரென வந்து இறங்கிய ராணுவ ஹெலிகாப்டர்.. ராஜபக்சே குடும்பத்தினர் எஸ்கேப்? -வீடியோ

    அதே சமயம் மகிந்த ராஜபக்சே ஹெலிகாப்டரில் ஏறுவது போன்ற புகைப்படம் ஒன்றும் பரவி வருகிறது. ஆனால் அது 2019ல் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் ஆகும்.

    இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தனை நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் நேற்று ராஜபக்சே ஆதரவாளர்கள் கலவரம் செய்தனர்.

    இதையடுத்து நடந்த மிகப்பெரிய மோதலில், இலங்கையில் தென்பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள் தொடர்ந்து சிங்களரால் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.

    “யார் வீரன்?” தப்பி ஓட தயாராகும் ராஜபக்ச.. இறுதி தோட்டா வரை களத்தில் நின்று மாண்ட பிரபாகரன்! “யார் வீரன்?” தப்பி ஓட தயாராகும் ராஜபக்ச.. இறுதி தோட்டா வரை களத்தில் நின்று மாண்ட பிரபாகரன்!

    தப்பி ஓட்டம்?

    தப்பி ஓட்டம்?

    இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற போவதாக செய்திகள் வருகின்றன. தனி விமானம் மூலம் அவர் நாட்டை விட்டு தப்பித்து ஓடி விடுவார் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல் அவர் எந்த நாட்டிற்கு தப்பித்து ஓட போகிறார் என்பது குறித்த விவரங்களும் வெளியாகவில்லை. ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

    நமல் ராஜபக்சே

    நமல் ராஜபக்சே

    இன்று கொழும்பில் இருந்து ரகசிய விமானம் ஒன்று வெளியேறிய சாட்டிலைட் புகைப்படங்களும் இணையத்தில் உலா வருகின்றன. இந்த விமானத்தில் மஹிந்த இருப்பதாக ஒரு தரப்பு கூறுகிறது. அதே சமயம் அது வெறும் கார்கோ விமானம்தான் என்றும் செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில்தான் மஹிந்தவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நமல் ராஜபக்சேவின் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் இருந்து தொப்பித்து ஓடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    எங்கே செல்கிறார்

    எங்கே செல்கிறார்

    நமல் ராஜபக்சேவின் மனைவி,குழந்தைகள் இதில் தப்பித்து ஓடுவது போல காட்சிகள் உள்ளன. இவர்களின் வீட்டின் பின் பக்கம் இருக்கும் மைதானத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கிஉள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றன. அதில் ஏறி இவர்கள் தப்பித்து சென்றது போல காட்சிகள் உள்ளன. இவர்கள் திரிகோண மலையில் இருக்கும் கடற்படை தளபதி உல்லுகெந்தன்னா வீட்டில் தங்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானாலும் அந்த செய்திகள் உறுதிக்கப்படுத்தப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பே நமலின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேற போவதாக செய்திகள் வந்தன.

    ஹெலிகாப்டர்

    ஹெலிகாப்டர்

    இதே கடற்படை தளபதி உல்லுகெந்தன்னா வீட்டில்தான் மஹிந்த ராஜபக்சேவின் மனைவியும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் ஒவ்வொருவராக வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் நமலின் குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் செல்வதாக சொல்லப்படும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் இந்த வீடியோக்கள் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

    இது தொடர்பாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நமல் ராஜபக்சே விளக்கம் அளித்துள்ளார். அதில், என் தந்தை பாதுகாப்பாகவும், குடும்பத்துடன் தொடர்பிலும் உள்ளார்; நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் எங்கள் குடும்பத்துக்கு இல்லை. எப்போதும் எங்கள் மக்களுடனே நிற்கிறோம் என்று மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நமல் AFP செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

    English summary
    Did Namal Rajapaksa's family leave the house in army helicopters in Sri Lanka amid protests? இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற போவதாக செய்திகள் வருகின்றன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X