இலங்கை: புதிய பிரதமராக நாளை மறுநாள் பதவியேற்கிறார் மகிந்த ராஜபக்சே
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சே நாளை மறுநாள் புதிய பிரதமராக பதவி ஏற்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர்- பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய் மக்கள் சக்தி 2-வது இடத்தையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.

இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்கிறார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமது வெற்றி குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மகிந்த ராஜபக்சே, ஜனாதிபதி கோத்தபாய மீதும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீதும் மக்கள் வைத்த நம்பிக்கைக்கு கவுரவம் அளிக்கிறது தேர்தல் முடிவுகள் என குறிப்பிட்டிருக்கிறார்.
இதனிடையே நாளை மறுநாள் கொழும்பில் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்கிறார். அவரது மூத்த சகோதரரும் அதிபருமான கோத்தபாய ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications