Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடும் பொருளாதார நெருக்கடி... தவிக்கும் இலங்கை மக்கள் - மகிந்த ராஜபக்ச வீடு அருகே மக்கள் போராட்டம்

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்சே வீடு அருகே ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் உருவானது.

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச வீடு அருகே பொதுமக்கள் போராட்டத்தால் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது. பல அடுக்கு பாதுகாப்பையும் தாண்டி பொதுமக்கள் ஆக்ரோஷத்துடன் போராடி வருகின்றனர்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னர் இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கு இலங்கை வெளிநாடுகளை நம்பி, அங்கிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனை மேற்கொள்ள போதுமான பணம் டாலரில் இல்லாததால், பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களை கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.

தெருவில் இறங்கிய மக்கள்

தெருவில் இறங்கிய மக்கள்

பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, இலங்கை அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர், மக்கள் தெருவில் இறங்கிப் போராடிவருகிறார்கள். எரிபொருட்கள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டை முற்றுகையிட்டனர்.

ஊரடங்கு அமல்

ஊரடங்கு அமல்

பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் கடும் கொந்தளிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, ராணுவம் தீவிர ரோந்துப் பணியில் உள்ளது.

மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச

இந்த நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக வந்த தகவல் வெளியானது. அது வதந்தி எனவும், தற்போது அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. மகிந்த ராஜபச்சவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

வீடு அருகே போராட்டம்

வீடு அருகே போராட்டம்

இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீடு அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகிந்த ராஜபக்சவின் வீடு முன்பு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அரண்களையும் தாண்டி மக்கள் முன்னேறி வருவதால் பதற்றம் உருவாகியுள்ளது. வினை விதைத்த மகிந்த ராஜபக்ச அறுவடை செய்ய தயாராக வருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+