இருளில் மூழ்கிய இலங்கை.. 10 மணிநேரம் மின்சாரம் இல்லாமல் தவிப்பு- மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்
கொழும்பு: இலங்கையில் திங்கள்கிழமையன்று சுமார் 10 மணிநேரம் மின்சார விநியோகம் தடைபட்டதால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. இதேபோன்ற மின்தடை மீண்டும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக இலங்கை மின்சார வாரியம் எச்சரித்துள்ளது.
இலங்கையின் கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று பிற்பகல் பழுது ஏற்பட்டது. இதனால் இலங்கை முழுவதும் மின்சார விநியோகம் தடைபட்டது.

பெரும்பாலான இடங்களில் சிக்னல்கள் இயங்கவில்லை. இந்த மின்தடையானது சுமார் 10 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் ஒட்டுமொத்த இலங்கையும் கடும் பாதிப்பை எதிர்கொண்டது.
2016-ம் ஆண்டு இதேபோல் மிகப் பெரிய மின்தடையை பல மணிநேரம் இலங்கை அனுபவித்தது. தற்போது 4 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மிகப் பெரும் மின்தடை நிகழ்ந்துள்ளது.
அத்துடன் இந்த மின்தடையால் நுரைச்சோலை மின்நிலையமும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இதனால் மீண்டும் இலங்கை மிகப் பெரும் மின்தடையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் இலங்கை மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய மின்தடைக்கு பின்னால் எந்த ஒரு சதித் திட்டமும் இல்லை எனவும் இலங்கை அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்தும் உள்ளன.
Recommended Video
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications