இலங்கை: கொழும்பில் இன்றும் கோத்தபாய பதவி விலக கோரி போராட்டம்- அதிபர் அலுவலகத்தில் நுழைய முயற்சி!
கொழும்பு: இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி கொழும்பில் இன்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை மிக மிக கடுமையாக உயர்ந்து பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் கேன்களுடன் பொதுமக்கள் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இப்படி காத்திருப்பவர்களுக்கும் விற்பனை நிலையம் நடத்துபவர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல்களும் நிகழ்ந்துள்ளன.

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு ரூ7,500 கோடி கடனுதவி கொடுத்துள்ளது இந்தியா. அத்துடன் சர்வதேச நிதியத்தின் உதவியையும் இலங்கை நாடியுள்ளது.சர்வதேச நிதியத்திடம் உதவி பெறுவதற்கும் இலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் இலங்கை முழுவதும் இத்தகைய போராட்டங்களை நடத்தி வருகின்றன.

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று ஜே.வி.பி.யின் இளைஞர் பிரிவினர் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது இலங்கை திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவுக்கு எரிவாயு சேமிப்பு கிடங்குகள் வழங்கப்பட்டதை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் போராட்டக்காரர்கள் அதிபர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தற்போதைய போராட்டங்களை தொடர்ந்து நடத்தப் போவதாக ஜேவிபி ஏற்கனவே அறிவித்துள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications