Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளிநாட்டவருக்கு ஆயுதங்களை விற்பனை செய்த இலங்கை கடற்படை அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: வெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை இலங்கை கடற்படை அதிகாரிகள் விற்பனை செய்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரிக்க அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சே ஆட்சி காலத்தில் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சே ஆதரவுடன் நடுக்கடலில் அவன் காட் நிறுவனம் மிதக்கும் ஆயுதக் கப்பலை நிறுத்தியிருந்தது. அதில் இருந்த ஆயுதங்கள் இலங்கை ராணுவத்துக்கு சொந்தமானது.

Srilanka orders to probe on illegal arms sale

ஆனால் சட்டவிரோதமாக வெளிநாட்டவருக்கு அந்த ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, எங்களுக்கு முன்னரே இலங்கை கடற்படையினர் தங்களது ஆயுதங்களை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்தனர் என அவன் காட் நிறுவன தலைவர் மேஜ நிசங்க சேனாதிபதி கூறியிருந்தார்.

மேலும் இந்த ஆயுதங்கள்தான் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தாவுக்கும் விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்த இலங்கை கடற்படையினர் குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+