Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமா 10 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்கணும்.. நாடே சிதம்பரத்தை திரும்பி பார்க்கணும்: கமல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: என் தம்பி திருமாவளவனை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்தியாவே சிதம்பரத்தை திரும்பி பார்க்க வேண்டும் மநீம தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகிற 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் 40 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் அங்கம் வகித்து வருகிறது.

Kamalhaasan election campaign speech for Thirumavalavan

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து சிதம்பரத்தில் திறந்த‌‌ வேனில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் கமல்ஹாசன்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிதம்பரத்தில் பெரும் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் பேசினார்.

கமல்ஹாசன் பேசுகையில், "ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. அதனால் தான் நானும் என் தம்பி திருமாவளவனும் தோளோடு தோள் உரசி நிற்கிறோம். நாம் வீரர்கள், களம் கண்டே ஆகவேண்டும். சாதியம் தான் என் எதிரி. சாதியத்திற்கு என் வாழ்வில் இடமில்லை.

2009ல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் திருமாவளவன். ஆனால், கடந்த 2019ல் வெறும் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார். அப்போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். திருமாவளவனை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பேசியுள்ளார் தம்பி உதயநிதி ஸ்டாலின்.

இந்த முறை என் தம்பி திருமாவளவனை 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அப்படி ஜெயிக்க வைத்தால் தான் படித்துப் பாடம் கற்காத அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும். இந்தியாவே சிதம்பரத்தை திரும்பி பார்க்க வேண்டும்" என மநீம தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

மேலும் பேசிய கமல்ஹாசன், "திருமா ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மக்களின், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் போராடும் தலைவன். இது வாக்குறுதி அல்ல, சாட்சி. நான் பார்த்ததன் சாட்சி. களங்கமற்ற கறுப்பு வைரம் தம்பி திருமாவுக்கு இந்த பானை சின்னத்தில் வாக்குகளை பதிவு செய்யுங்கள்" எனப் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+