அனிதாவின் "அட்ராசிட்டி".. துடித்தே உயிரிழந்த போலீஸ்காரர்.. தலைதூக்கும் கந்துவட்டி.. கொடூர பெண் கைது
அனிதா என்பவரை கந்துவட்டி கொடுமையால் போலீசார் கைது செய்தனர்
கடலூர்: கந்துவட்டி கொடுமை மீண்டும் தலைதூக்கி உள்ள நிலையில், ஒரு உயிர் பரிதாபமாக போயிள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் செல்வக்குமார்,, 27 வயதாகிறது.. இவர் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
கடந்த 1-ம் தேதி கடலூர் வந்திருந்த அவர், கோர்ட் பக்கத்தில் திடீரென மயங்கி கீழே விழுந்தார்... இது பற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸார், விரைந்து சென்று, மயங்கி கிடந்த செல்வக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அனிதா
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் விஷம் குடித்தது தெரியவந்தது... அதாவது, குடும்ப செலவுக்காக அனிதா என்ற பெண்ணிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம்.. அந்த பணத்தையும் திருப்பி செலுத்தி விட்டாராம்... ஆனால், அனிதா, புரோ நோட்டை தராமல், மறுபடியும் மறுபடியும் பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்.. இதனால் மன வேதனை அடைந்த அவர் விஷம் குடித்து போலீஸ் எஸ்பி ஆபீசுக்கு வந்துள்ளார்..

விசாரணை
அங்கே நடந்து வந்தபோதுதான் திடீரென மயங்கி விழுந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரது உடல் நிலை மோசமானதால், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.. ஆனால், அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.. இன்று காலை அவர் உயிரிழந்தார்.. இதையடுத்து, புதுநகர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்..

போலீஸ்காரர்
தற்போது, கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கந்துவட்டி அனிதாவை போலீசார் கைது செய்தனர்... காவலர் செல்வகுமாருக்கு ரூ.5 லட்சம் வழங்கிய நிலையில் ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக, செல்வக்குமாரின் அப்பா புகார் தந்திருந்தார்.. அந்த புகாரின் அடிப்படையில் அனிதா கைதாகி உள்ளார்.. இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு, கந்துவட்டி டார்ச்சர் தாங்காமல், இசக்கிமுத்து என்பவர், தன் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் ஆபீசில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்..

கடிவாளம்
இந்த சம்பவம் தமிழகத்தை நிலைகுலைய வைத்தது.. ஒருகுடும்பமே தீயில் வெந்து இறந்ததை கண்டுமக்கள் துடிதுடித்தனர்.. இதற்கு பிறகுதான், கந்துவட்டி விவகாரத்தில் அரசு தலையிட்டது.. கடிவாளத்தையும் போட்டது.. இது தொடர்பான மரணங்களும் ஓரளவு குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஒரு உயிர் காவு வாங்கப்பட்டுள்ளது.. பெண் ஒருவர் தந்த டார்ச்சரால், அப்பாவி ஒருவர், அதுவும் போலீஸ்காரரே தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications