Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதம்பரம் அருகே ஓடும் பேருந்தில் அப்படி ஒரு சம்பவம்.. ஆடிப்போன பெண்.. யார் அந்த மர்ம நபர்?

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தனது மகளுக்கு ஆசை ஆசையாய் நகை வாங்க பணத்துடன் சென்றுள்ளார் ஒரு பெண்.. அதற்காக பேருந்தில் ஏறி சென்றவருக்கு, பேருந்தை விட்டு இறங்கிய பின்னர் தான் அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பணம் மொத்தத்தையும் ஓடும் பேருந்தில் தனதுபெண்ணிடம் இருந்து மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இதுபற்றி புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூட்டமான பேருந்துகளில் நகை, பணம் வைத்து செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டியது அவசியம் ஆகும். ஏனெனில் திருடர்கள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள். திருடர்களிடம் பணத்தையும் , நகைகயும் பாதுகாக்க நிறையவே இங்கு மெனக்கடவேண்டியிருக்கிறது. கூட்டமான பேருந்துகளில் இடிப்பது போல் வந்து பிளேடு போட்டு பாக்கெட்டில் உள்ள பர்சை திருடுபவர்கள் அதிகம்.

cuddalore gold bus

அதேபோல் கூட்டமான இடங்களில் பைகளை எடுத்துக்கொண்டு அப்படியே போய்விடுபவர்களும் அதிகம்.. பேருந்துகளில் சிசிசிடிவி கேமராக்கள் இல்லாமல் போனால் திருடர்களை கண்டுபிடிப்பது மிக கடினம். இப்போது வரும் தனியார் பேருந்துகள் பலவற்றில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம் பழைய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்காது என்பதால் திருடர்களை பிடிக்க முடியாமல் போக வாய்ப்பு அதிகமாக உள்ளது. கையும் களவுமாக சிக்கினால் மட்டுமே திருடர்களை இன்றைக்கு பிடிக்க முடிகிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சாத்தமங்கலம் சிவன் கோவில் தெருவை அந்தோணிசாமி, மற்றும் அவருடைய மனைவி லீமாமேரி (வயது 49) ஆகிய இருவரும் தங்களது மகள் நந்தினிக்கு புதிய நகைகள் வாங்க முடிவு செய்தார்கள். இதையடுத்து கணவன்-மனைவி 2 பேரும் தங்களது மகளுடன் ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் ரொக்கத்தை ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு நகை வாங்குவதற்காக சாத்தமங்கலத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி சிதம்பரம் நகை கடைக்கு புறப்பட்டு சென்றார்கள்.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதில் பணப்பையை லீமாமேரி வைத்திருந்தார். அந்த பஸ் சிதம்பரம் கஞ்சி தொட்டி முனை பஸ் நிறுத்தத்தில் நின்றிருக்கிறது. அப்போது பஸ்சில் இருந்து இறங்கிய லீமாமேரி அருகே உள்ள நகை கடைக்கு செல்வதற்கு முன்பு தான் வைத்திருந்த பையை பார்த்துள்ளார். அதில் இருந்த பணத்தை காணவில்லை.

ஓடும் பஸ்சில் தங்களுடன் பயணம் செய்த மர்மநபர் யாரோ?, கூட்ட நெரிசலை பயன்படுத்தி தான் வைத்திருந்த பையில் இருந்த பணத்தை திருடிச் சென்றிருப்பதை கண்டார்.. இதனால் பதறிய லீமாமேரி திருடுபோன பணத்தை மீட்டு தரக்கோரி சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பஸ்சில் வந்த பெண்ணிடம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மகளுக்கு ஆசை ஆசையாய் நகை வாங்கி கொடுக்க சிதம்பரத்தில் பஸ்சில் வந்த பெண்ணிடம் மர்மநபர் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+