சர்க்கரை நோய் டூ சளி தொற்று.. இந்த மாத்திரை மட்டும் வாங்காதீங்க.. 145 மருந்து தரமில்லை: மத்திய அரசு
டெல்லி: சளித்தொற்று, கிருமித்தொற்று, சர்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 145 மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்திருக்கிறது.
நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, நோயாளிகள் உபயோகப்படுத்தும் மருந்து, மாத்திரைகள் அனைத்து பரிசோதனைகளுக்கு பிறகே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. இத்தகையை பரிசோதனைகளை, CDSCO (Central Drugs Standards Control Organisation) என்ற மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்புதான் மேற்கொண்டு வருகிறது.

இந்த அமைப்பு மேற்கொள்ளும் அனைத்துவிதமான சோதனைகளுக்கு பிறகே, மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு வரும்.. ஒருவேளை, தரம்குறைவாக இருப்பது தெரிந்தால், அந்த மருந்தின் விற்பனை உடனடியாக தடை விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும்.
மருந்து மாத்திரைகள் மீண்டும் ஆய்வு
அந்தவகையில ஏற்கனவே 156 வகையான ஃஎப்டிஎஸ் (FDS or Fixed Dose Combination) வகையை சேர்ந்த மாத்திரைகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு பகீர் வெளியாகியிருந்தது.
சந்தேகத்திற்குரிய மாத்திரை, மருந்துகளை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்தபோது, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வைட்டமின் குறைபாடு, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உபாதைகளுக்கு எடுத்துக்கொள்ளும் பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் தரமானதாக இல்லை என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சர்க்கரை நோய், சளித்தொற்று
இந்நிலையில், சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக உட்கொள்ளப்படும் 145 மருந்துகள் தரமற்றதாக இருந்ததை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது..
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சளித்தொற்று, கிருமித்தொற்று, சர்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
மருந்து கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு
இந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவையாகும்.. எனவே, அதுகுறித்த விவரங்களையும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த விவரங்களை அறிந்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு முறை ஆய்வின்போதும், சர்க்கரை நோய், சளித்தொற்று என மக்களை பெரும்பாலும் பாதிக்கக்கூடிய நோய்களுக்கான மருந்துகளே தரமற்றவையாக கண்டறியப்பட்டு வருவது, பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் உண்டு பண்ணி வருகிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications