பாஜவில் இணைந்தால் ரூ.20 கோடி.. ஆம் ஆத்மி டெல்லி எம்எல்ஏக்களிடம் பாஜக பேரம்? பரபர குற்றச்சாட்டு
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் ரூ.20 கோடி வழங்குவதாக வழங்கப்படுவதாக பேரம் பேசப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கெனவே டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த எம்.பி சஞ்சய் சிங், "மற்ற மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்ததை போல டெல்லியில் கவிழ்க்க முடியாது" என கூறியுள்ளார்.

மதுபான கொள்கை
டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார். இந்த புகாரை டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் சில அரசு அதிகாரிகள் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றச்சாட்டு
இந்த குற்றச்சாட்டில், மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த முறைகேடுகள் குறித்து அரசின் தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆளுநர் கடந்த மாதம் கேட்டு கொண்டார். அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.

சிபிஐ ரெய்டு
இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனையை மேற்கொண்டது. இதன் பின்னர் பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால், "சிசோடியாவுடன் நானும் கூட சில நாட்களில் போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்படலாம்" என்று கூறியிருந்தார். அதேபோல இந்த அரசை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தாங்கள் வந்து பாஜவில் இணைந்தால் ரூ.20 கோடி தருவதாகவும், மற்றவர்களை இணைத்தால் ரூ.25 கோடி தருவதாக பாஜக தங்களிடம் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்று செய்தியாளர்களை சந்தித்த 5 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. மணீஷ் சிசோடியா மீது சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களை திசை திருப்பவே ஆம் ஆத்மி இம்மாதிரி கூறுவதாக தெரிவித்துள்ளது.

சோதனை வெற்றியடையவில்லை
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு, டெல்லி அரசை வீழ்த்துவதற்கு மத்திய புலனாய்வு அமைப்புகளை எப்படி பயன்படுத்துகிறது என்பதை அம்பலப்படுத்துவேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான சஞ்சய் சிங் கூறியுள்ளார். மேலும், "ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை உடைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாகதான் சிபிஐ சோதனை சிசோடியா மீது தொடங்கப்பட்டது. ஆனால் அது வெற்றியடையவில்லை" என்றும் கூறியுள்ளார்.

கடைசி வரைக்கும் மெயின் பிக்சர் இல்லை
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜகவின் செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, கெஜ்ரிவால் கட்சி தொடர்ந்து டிரெய்லர்களை வெளியிடுகிறது, ஆனால் திரைப்படத்தை இன்னும் வெளியிடவில்லை என்று கூறியுள்ளது. மேலும், "இந்த குற்றச்சாட்டு தொடர்பான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக ஆம் ஆத்மி கூறுகிறது. ஆனால் இந்த ஆதாரங்களை அவர்கள் ஒருபோதும் வெளியிடவில்லை. அதை அவர்கள் வெளியிடவும் மாட்டார்கள்" என்றும் அவர் கூறியுள்ளார்.
துணை முதலமைச்சர் வீட்டிர் சிபிஐ ரெய்டு, வழக்குப்பதிவு, கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் என டெல்லியில் தொடர்ந்து அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி!












Click it and Unblock the Notifications