சத்தீஸ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை- ஒரே ஆண்டில் "நக்சல் இல்லா தேசம்"- அமித்ஷா சபதம்!
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தேடுதல் நடவடிக்கையில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுகளுடனான இந்த மோதலில் ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இந்த மோதலைத் தொடர்ந்து பதுங்கி உள்ள மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிஷா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களின் சில மாவட்டங்களில் மட்டும் தற்போதும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. ஆயுதப் புரட்சியின் மூலம் டெல்லியின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பது மாவோயிஸ்டுகளின் சித்தாந்தம். இது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதால் மாவோயிஸ்டுகள் பலவீனமடைந்துவிட்டனர்.

நாட்டின் பழங்குடி மக்களே, மாவோயிஸ்டுகளின் கேடயமாக இருந்தனர்; ஆனால் பழங்குடி மக்களும் வெகுமக்கள் நீரோட்டத்தில் இணைந்துவிட்டதால் மாவோயிஸ்டுகள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர்.
அதேநேரத்தில் மாவோயிஸ்டுகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொத்து கொத்தாக மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கரின் பீஜப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் குழு நடமாடுவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்பு படையினர் வனப்பகுதிகளுக்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த துப்பாக்கிச் சண்டை மோதல் பல மணிநேரம் நீடித்தது. இம்மோதலில் மொத்தம் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் ரிசர்வ் பாதுகாப்பு படை ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டது பற்றி பெருமிதம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் மாவோயிஸ்டுகள் இல்லாத இந்தியா உருவாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்.
#WATCH | Jagdalpur, Chhattisgarh | On 22 Naxalites killed during the encounter in Chhattisgarh, IG Bastar P Sundarraj says, "Operations were conducted today in various areas of the Bastar district...In the Bijapur-Dantewada border, we have recovered the bodies of 18 Naxalites and… pic.twitter.com/f24zHjHBMb
— ANI (@ANI) March 20, 2025
சத்தீஸ்கர் பஸ்தார் ஐஜி சுந்தரராஜ் கூறியது என்ன?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தும் பஸ்தார் ஐஜியாக இருப்பவர் சுந்தரராஜ். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரது பணி காலத்தில்தான் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இன்றைய சம்பவம் தொடர்பாக ஐஜி சுந்தரராஜ் கூறியதாவது: மாவோயிஸ்டுகளை தேடி அழிக்கும் நடவடிக்கை தொடருகிறது. பஸ்தாரின் பிஜப்பூர்- தண்டேவடா எல்லையில் இந்த மோதல் நடைபெற்றது. இதுவரை 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு ஐஜி சுந்தரராஜ் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications