புதிய சட்டங்களுக்கு எதிராக நாளை விவசாயிகளின் 'பாரத் பந்த்'
டெல்லி: மத்திய பாரதிய ஜனதா அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நாளை பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
வேளாண் மசோதாக்களை லோக்சபாவிலும் ராஜ்யசபாவில் மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த வேளாண் மசோதாக்கள் அனைத்துமே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானவை; விவசாயிகளை வஞ்சிக்கக் கூடியவை என்பதுதான் எதிர்ப்புக்கு காரணம்.

காங். போராட்டம்
இதனால் பஞ்சாப், ஹரியானா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது. சில இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பாரத் பந்த்
இதனிடையே 250க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் நாடு தழுவிய பாரத் பந்த போராட்டத்தை நாளை நடத்த அழைப்பு விடுத்துள்ளன. பாரதிய கிஷான் யூனியன் (BKU), அனைத்து விவசாயிகள் யூனியன் (AIFU), அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு (AIKSCC), அனைத்து விவசாயிகள் மகா சங்கம் (AIKM) ஆகியவை கூட்டாக இணைந்து இந்த பாரத் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

லாரி ஓட்டுநர்கள் சங்கம்
விவசாயிகளின் இப்போராட்டத்துக்கு ஆதரவாக லாரி ஓட்டுநர்கள் சங்கமும் நாளை லாரிகளை இயக்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. இதேபோல் ஓலா கார் ஓட்டுநர்கள் சங்கமும் பாரத் பந்த்தில் இணைவதாக அறிவித்திருக்கின்றன. உத்தரப்பிரதேசத்திலும் இந்த பாரத் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என அம்மாநில விவசாய சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

நெடுஞ்சாலைகளில் மறியல்
ஹரியானா, பஞ்சாப்பில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முழுமையாக அடைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், நகரங்கள், கிராமங்களில் நாளை வாகனங்கள் இயக்கப்பட்டால் அவற்றை தடுத்து நிறுத்தி மறியல் செய்யவும் விவசாய அமைப்புகள் முடிவு எடுத்துள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications