ஸ்பெக்ட்ரம் 2 ஜி வழக்கு: ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் 2 ஜி வழக்கில் திமுக எம்பியும் முன்னாள் மத்டிய அமைச்சருமான ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் மனுத் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவையும் பதில் மனுத் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
2ஜி ஊழல் வழக்கு என்பது இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மூலமாக மத்திய அரசுக்கு ரூ1,70,000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்பது பூடகமான ஒரு குற்றச்சாட்டு. இந்த ரூ1,70,000 கோடி இழப்பு என்பதை திமுகவின் அந்நாளைய அமைச்சர் ஆ.ராசா, எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கொள்ளையடித்துவிட்டதாகவும் பொய் பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதனை வைத்துதான் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது.
ஆனால் தம் மீதான 2ஜி ஊழல் வழக்கை எதிர்கொண்டார் ஆ.ராசா. சிறைவாசம் அனுபவிக்க நேரிட்ட போதும் ஆ.ராசா தமது வழக்கில் தாமே ஆஜரானார். தமக்கு எதிராக சிபிஐ, அமலாக்கப் பிரிவு முன்வைத்த பூடகமான மோசடி வாதங்களை தகர்த்து எறிந்தார். இதனால் 2017-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் 2ஜி ஊழல் வழக்கில் இருந்து ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். திமுக மீதான ஆகப் பெரும் கறை அகற்றப்பட்டது. அதனால்தான் ஆ.ராசா சிறையில் இருந்து விடுதலையான போது தகத்தகாய சூரியன் என போற்றினார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

ஆனால் ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவை மேல்முறையீடு செய்தது. இம்மேல்முறையீட்டு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகிய அனைத்து தரப்பும் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22, 23 தேதிகளில் நடைபெற உள்ளது.













Click it and Unblock the Notifications